Total Pageviews

Thursday, March 29, 2012

நினைவுகள் ஊஞ்சலாட....!!!!!!!!!

இரவு நேரம் நொடிகளாய் நகர
பகல் வேலை பல்லக்கில்
பவனி வர என் நெஞ்சில்
உன் நினைவுகள் ஊஞ்சலாட

உலகில் காணும்ஒவ்வொரு பொருளும்
உன்னை நினைவு படுத்த
ஓடிச்செல்ல இடமில்லாமல்
தவிக்கும் என் உள்ளம்

நலமா என்று நண்பன்
கேட்டால் கூட நலம்
என்று கூற நீ
இல்லையே அருகில்

உணவின் ஒவ்வொரு
பருக்கையும் உன்னை
நினைவுபடுத்த போராட்டம்

பசியின் கொடுமை ஒருபுறம்
வாட்டினாலும் உணவின்
ருசியை உணர்த்தியது உன்
கைகள் தானே .....!!!!!

1 comment: