Total Pageviews

Thursday, March 29, 2012

நினைவுகள் ஊஞ்சலாட....!!!!!!!!!

இரவு நேரம் நொடிகளாய் நகர
பகல் வேலை பல்லக்கில்
பவனி வர என் நெஞ்சில்
உன் நினைவுகள் ஊஞ்சலாட

உலகில் காணும்ஒவ்வொரு பொருளும்
உன்னை நினைவு படுத்த
ஓடிச்செல்ல இடமில்லாமல்
தவிக்கும் என் உள்ளம்

நலமா என்று நண்பன்
கேட்டால் கூட நலம்
என்று கூற நீ
இல்லையே அருகில்

உணவின் ஒவ்வொரு
பருக்கையும் உன்னை
நினைவுபடுத்த போராட்டம்

பசியின் கொடுமை ஒருபுறம்
வாட்டினாலும் உணவின்
ருசியை உணர்த்தியது உன்
கைகள் தானே .....!!!!!

இரவே முடிந்து போனது......!!!!

தனிமையாக இருக்க
எண்ணி ஓடினேன்
பல மைல் தூரம்.....

துரத்தினாய் உன் காதலால்
இரவுகள் எல்லாம் 
நீண்டு போனது .... 


உறக்கமே மறந்து 
போனது உன் முத்தத்தின்
சத்தம் மட்டும் காற்றின் ஒலியில்

இங்கே மவுனமாய் கேட்கும்
போது காதலே இல்லா
காவியமாய் நான் இங்கே


இந்த இரவின் நீளத்தைவிட 
உன் நினைவின்
நீளம் கொடுமையானது 


என் உறக்கத்துடன் 
உன் உறவின் நினைவு 
போட்டியிட இங்கே 
இரவே முடிந்து போனது......!!!!

சந்தோஷ நிமிடங்கள் !!!!!!!!!

ஒரு துளி கண்ணீரை பார்த்து
உயிர் துடிக்கும் நீ
இன்று உருண்டோடும்
கண்ணீரைக் கண்ண்டும்
உறுதியாய் நிற்பது ஏன் ??

என் கண்ணீரில்
உப்பில்லையா
அல்ல உன் கண்களில்
தெளிவில்லையா ??

என் புன்னகையின்
பின்னே ஒளிந்துள்ள
சோகம் நீ உணரும்
காலம் வருமா ??

கல்லில் பதித்த
தடமாய்இருந்த நம் காதல்
இன்று கடல் அலையில்
பதித்த கால் தடமாய் போனதோ ??

உன்னுடன் கழித்த
சந்தோஷ நிமிடங்கள்
அனைத்தும்இன்று
நிரந்தரமில்லாமல் போனதே ....!!

ஆனந்தமாய் வந்து
கால் தடத்தை அழித்து விட்டு போகும்
அலையே அதில் என் கண்ணீரும்
கலந்துள்ளது என்பதை மறவாதே !!!!

பிரிவின் வலி....!!!!

வார்த்தைகளால் இணைந்து
அன்பால் அருகில் அமர்ந்து

ஆறுதலாய் அணைத்து
இன்பமாய் வாழ்ந்த

நாட்கள் வெகுதூரம் போன பின்
பிரிவின் வலியை

உணராத உன்னிடம்
மன்றாடி என்ன பயன்??

உன் கைகளை
தலையனையாக்கி

முத்தங்களை மருந்தாக்கி
மயக்கத்தில் உறங்க

வைத்த மாயம் எல்லாம்
இன்று மனதில் காயங்களாய் ...

வலியின் வேதனையிலும்
மனம் தேடுவது

உன் அருகாமையை
மட்டும்தான் .............!!

அணைத்துக்கொள் அன்பே !! !!

கண்ணே உன்
கண்ணோடுகண்ணாய்
உயிரோடு உயிராய்

உடலோடு உடலாய்
வாழ்ந்த காலம் எல்லாம்
கனவாகிப்போனது இங்கே ...

உன்னுடன் நானும்
என்னுடன் நீயும்
இல்லை இன்று ....

ஒரு நாள் என்னைக்
காணும் ஆவலுடன் நீ
ஆனந்தமாய் ஓடி வருவாய் ...

அன்று என்
 உயிர் பிரிந்து
இமைகள் மூடி ...

வெற்றுடலாய் கட்டிலில்
காத்திருப்பேன்
உன்னைக் காண

அணைத்துக்கொள் அன்பே !! 

என் விருப்பத்திற்காக !!!

வாழ்க்கை வரலாறாக வேண்டும் 
என்ற ஆசையும் இல்லை 
வானத்தில் பரக்க வேண்டும்
என்ற ஆசையும் இல்லை !!

கண்களை மூடி இருந்தாலும்
உன் எண்ணம் 
காணும் காட்சிகள் 
எல்லாம் உன் வண்ணம் !!

கல்லில் வடித்த 
சிலையில் கடவுளை 
வழிபடும் மக்களை போல !! 

கண்ணில் படும் 
அனைத்திலும் 
உன் உருவம் காணும் 
குருடனாய் நான் !!

என் கண்ணில் படும்படி 
ஒருமுறையேனும் உலவு 
களவாணி போலாவது 
பார்த்துக்கொள்கிறேன் உன்னை !!

இயற்கையின் விருப்பத்திருக்கு
இல்லை உதிர்க்கும் மரம்போல
என் விருப்பத்திற்காக வந்துவிடு .....!!



நன்ம்பிக்கையுடன் ...!!!!!

கொடியில் பூத்த மலர்களை
மாலையாக தொடுத்தேன்

கொல்லையில் இருந்த வாசத்தை
குடிலுக்குள் கொண்டு வந்தேன்

சோகத்தையும் சந்தோஷத்தையும்
கவிதையில் வடித்தேன்

ஆசையையும் ஏக்கத்தையும்
பெருமூச்சாய் வெளியிட்டேன்

திருவிழாவில் தொலைந்த
குழந்தைபோல் கூட்டத்தில்

நான் தன்னந்தனியாய்
தவித்து நிற்கிறேன்

அன்னையாய் நீ வந்து
அழைத்து செல்வாய்
என்ற நன்ம்பிக்கையுடன் ...!!!

Wednesday, March 28, 2012

போராடும் புழுவாய் நான்..!!!!

காதல் தெய்வீகமானது
எல்லோரும் கூறுவது...!!

தேடாத காதல்தேடி வந்தது
அன்பின் வடிவில்...!!

 உலகையே ஆளும்
கர்வத்துடன் ஊரை சுற்றினேன் ...!!

திருடனை போல் வந்து
தென்றலாய் அழைத்து சென்றாய்...!!


காற்றை சுவாசித்ததைவிட
உன் மூச்சை சுவாசித்த நாட்களே ..!!


இப்போது நினைவில் நினைவுகள் 
நெஞ்சு கூட்டை சுட...!!


உயிருக்கு போராடும் 
புழுவாய் நான் இங்கே ....!!


இன்னும் சில காலம்
வாழ ஆசைபடுகிறேன் ....!!

உன் மூச்சு காற்றை
தருவாயா நான் சுவாசிக்க ??

இதயம் கல்லாகி போனதோ ???

கனவுகளுடனும் 
உன் நினைவுகளுடனும் 
வாழ்ந்த காலம் போதும்

உன் மேல் நான் கொண்ட 
அன்பிற்காக நீ கொடுத்த
பரிசு கண்ணீர் மட்டும்தானா 

நம் பிரிவு வாட்டுவது 
உன்னை அல்ல 
என்னை மட்டுமே  

பிரிவை உணரும் 
காலம் வருமா இங்கே 
யார் செய்த சதி இது 

கருணையும் காதலும் 
கொண்ட உன் இதயம் 
கல்லாகி போனதோ 

பாறையிலும் நீர்
சுரக்கும் என்பதை 
நினைவில் கொள் ..!!

நடை பிணமாய் நான் !!!!

வாழ்கையை தொடங்கும்போது
நினைத்த்ததில்லை நீ வருவாய்
என் வாழ்வில் என்று ....

விதி வலியது யாரை
எங்கு கொண்டு சேர்க்கும் என்றே தெரியாது
உன்னையும் என்னையும்
சேர்த்தது விதியா அதன் விளையாட்டா

என் உடலை மட்டும் விடுத்து
உயிரை பறித்து சென்றதே
நடை பிணமாய் நான் இங்கே

என் உள்ளாத்தின் சாவி
என்னிடம் இருந்திருந்தால்
உன்னை என்னுள்ளே
வைத்து பூட்டியிருப்பேனே ...!! 

நினைவுகள் குளிர்ச்சியாய்..!!!!

மழை பெய்யும்போதெல்லாம்
உன் நினைவுகள் குளிர்ச்சியாய்
ஓடும் மேகங்களிலும்
உன் நிழல் தேடினேன்

வருடி செல்லும்  காற்றில்
உன் வாசம் தேடினேன்
ஆடையின் வருடலில்
உன் ஸ்பரிசத்தை தேடினேன்

எதையும் காணாமல்
உன் குரல் மட்டும் இங்கே
என் காதுகளில்
ஒலித்துகொண்டிருக்க

உன் வார்த்தைகளை மட்டுமே
சுவாசித்துக்கொண்டிருக்கிறேன்
உயிருடன் ஒருநாள் உன்னை
அணைப்பேன் என் நம்பிக்கையில் ..!!

உயிருள்ள பிணம் !!

என் கரம் பிடித்து அரவணைத்து
ஆசையாய் அழைத்து  சென்றாய்

மழையில் நனைந்தேன்
வெயிலில் காய்ந்தேன்

காட்டிலும் மேட்டிலும் ஓடினேன்
இன்று என் கையை விட்டு விலகி சென்றாய்

நான் மட்டும் தனித்து தவித்து
தாய் இல்லா பிள்ளைபோல்

கண்ணீருடன் அனாதையாய்
உன்  நினைவுகளை சுமந்து

உயிருள்ள பிணமாய்
உயிரில்லா உறவுகளுடன் !!  

வந்துவிடு !!!!

உன்னை நினைத்தேன் 
கவிதை பாட ...
வார்த்தைகள் வராததால் 
நிலவை அழைத்தேன் துணைக்கு

அது என் நிழலை காட்டி மறுத்தது 
எனது மவுனத்தையே 
கவிதையாய் வடித்தேன்

உன் நினைவுகள் 
நெஞ்சில் அலைமோத 
என் கண்ணீரும்
இங்கே கவிதையாகிபோனது 

கண்ணீரை துடைக்க
உன் கைகள் இங்கே இல்லை 
என்றாலும் உன் வார்த்தைகள் 
சில துளிகளை தடுத்து விட்டதால்

அந்த துளிகளை இமைகள் தாங்கி 
நிற்கின்றன உன் வருகைக்காக 
வந்துவிடு இந்த 
கண்ணீரை தாங்குவதற்கு ....