வாழ்க்கை வரலாறாக வேண்டும்
என்ற ஆசையும் இல்லை
வானத்தில் பரக்க வேண்டும்
என்ற ஆசையும் இல்லை !!
கண்களை மூடி இருந்தாலும்
உன் எண்ணம்
காணும் காட்சிகள்
எல்லாம் உன் வண்ணம் !!
கல்லில் வடித்த
சிலையில் கடவுளை
வழிபடும் மக்களை போல !!
கண்ணில் படும்
அனைத்திலும்
உன் உருவம் காணும்
குருடனாய் நான் !!
என் கண்ணில் படும்படி
ஒருமுறையேனும் உலவு
களவாணி போலாவது
பார்த்துக்கொள்கிறேன் உன்னை !!
இயற்கையின் விருப்பத்திருக்கு
இல்லை உதிர்க்கும் மரம்போல
என் விருப்பத்திற்காக வந்துவிடு .....!!
No comments:
Post a Comment