Total Pageviews

Thursday, March 29, 2012

நன்ம்பிக்கையுடன் ...!!!!!

கொடியில் பூத்த மலர்களை
மாலையாக தொடுத்தேன்

கொல்லையில் இருந்த வாசத்தை
குடிலுக்குள் கொண்டு வந்தேன்

சோகத்தையும் சந்தோஷத்தையும்
கவிதையில் வடித்தேன்

ஆசையையும் ஏக்கத்தையும்
பெருமூச்சாய் வெளியிட்டேன்

திருவிழாவில் தொலைந்த
குழந்தைபோல் கூட்டத்தில்

நான் தன்னந்தனியாய்
தவித்து நிற்கிறேன்

அன்னையாய் நீ வந்து
அழைத்து செல்வாய்
என்ற நன்ம்பிக்கையுடன் ...!!!

No comments:

Post a Comment