Total Pageviews

Saturday, September 17, 2011

காத்திருப்பேன் .......

பவுர்ணமி நிலவையே 
வெறுத்தேன் அமாவாசை 
அன்று உன்னை சந்தித்ததால் ...

கோடையில் நீ வாடினால் 
தென்றலாகி வருவேன்
 உன்னை தழுவிட .......

பாறையாக  நீ மாறினாலும் 
அதில் வாழும் 
தேரையாவேன் நான் .....

வானவில் என்று உன்னை
ஒருபோதும் வர்ணித்து 
இருக்க மாட்டேன் 

இப்படி வந்த வேகத்திலோ 
மறைந்து போவாய்
என்று தெரிந்திருந்தால் 

மீண்டும் வா 
காத்திருப்பேன் 
உனக்காக இங்கே ....

என் மனதில் நீ !!!!

கல்லில் வடிக்கப்பட்ட 
சிலையில்லை நீ 
என் கைகளால் 
வரையப்பட்ட ஓவியம் ...... 

சூரியனை காண 
ஓடியதில்லை நான் 
எட்டு திக்கும்  நீயானதால் ..... 

நிழலுக்காக மரங்களை
தேடி ஓடியதில்லை நான் 
உன் அன்பு நிழலில் 
எப்போதும் வாழ்ந்ததால் .... 

பூக்களின் வாசம் 
முகர்ந்ததில்லை நான் 
என் சுவாசத்தில் நீ இருந்ததால் ..... 

உறங்க நினைத்ததில்லை
என் இமைகளில் 
நீ வாசம் செய்வதால் ....... 

பச்சை பாதையில்
பதிந்துவிட்ட பாதங்களை 
போல என் மனதில் நீ !!!!

உன்னை நான் அறிவேன் ......

நீ கற்களை வாரி 
இறைத்தபோது தடுத்தது
 எனக்கு வலிக்குமே 
என்பதற்காக அல்ல 
உனக்கு வலிக்குமே என்று ......

கைகளால் என்னை 
தாக்கியபோது உன்னை 
தடுத்தது எனதுவலிமையை 
காட்ட அல்ல உன் கை 
வலிக்குமே என்று ......

உன்னை நான் 
அறிவேன் 
நான் மட்டுமே
அறிவேன் ......

படுக்கையில் நான் பல்லக்கில் நீ !!!!

உலகம் மறந்து 
உன்னுடன் இருந்த 
பொழுதுகளில் என்னை
 ஒரு முறையேனும்
 நினைத்திருக்கலாம் !!

உறக்கம் மறந்து 
தவித்த பொழுதுகளில் 
எல்லாம் உன்னை 
மறந்திருக்கலாம் !!

உன் நினைவுகள் 
என் நெஞ்சை அடைத்த 
பொழுது எல்லாம் நிஜங்களை 
உணர்ந்திருக்கலாம் !!

என் உள்ளத்தை 
தாக்கிய சோகம் உடலை
தாக்க வந்தபோதாவது 
நிமிர்ந்து ஒதுங்கி இருக்கலாம் !!


இன்று இங்கே 
படுக்கையில் நான் 
அங்கே பல்லக்கில் நீ !!!! 

வேறுலகம் சென்றுவிட்டாயா ????

உன்னை பாட நினைத்தேன்
 ராகம் இல்லை

எழுத்தில் வடிக்க நினைத்தேன் 
வார்த்தைகள் இல்லை

கட்டி அணைக்க நினைத்தேன் 
நீ அருகில் இல்லை 

கனவில் வர வேண்டினேன் 
உறக்கம் இல்லை 

கண்களை மூடினேன் 
என் எண்ணங்களில் இல்லை 

வெருமையாக்கிவிட்டு 
வேறுலகம் சென்றுவிட்டாயா ????

இது நம்பிக்கையா ?? முட்டாள்தனமா ??

நாளை என்பது 
முட்டாள்களின் வார்த்தையாம் .... 

இல்லை அது நம்பிக்கையை 
கொடுத்த வார்த்தை அல்லவா ??? 

நீ நாளை வருவாய் 
நாளை வருவாய் என 
ஒவ்வொரு நாளும் 
எனக்கு நம்பிக்கை வருகிறதே !! 

நாளை என்ற ஒன்று 
இல்லையென்றால் 
என்றோ இறந்திருப்பேன் 
நான் உன் நினைவில் ..... 

எதிர்பார்கிறேன் 
நீ நாளை வருவாய் என ..... 
இது நம்பிக்கையா ??  
முட்டாள்தனமா ??

அமைதி காக்கிராயே !!!!

உன் புகைப்படத்தை கண்டதும் 
அத்தனை  தவிப்பு
உன் அருகாமைதான்
எத்தனை ஆனந்தம் ... 

சொர்கமே நீதானே
இன்று சூழ்நிலை 
கைதியாய் நீயும் 
சுமைதாங்கியாய் நானும் ..... 

விதியின் வலையில்
சிக்கித் தவிக்கும் போதெல்லாம் 
உன் அன்பால் மீட்டு சென்றாயே 
இன்று ஆபத்தில் இருந்து 
அமைதி காக்கிராயே !!

Tuesday, September 13, 2011

உலகமே நீதானே .......

அன்பே ஆணையிடு .....
உனக்காக மலையை பியர்த்து
 எடுத்து வருகிறேன்

 நிலவை கொண்டு வருகிறேன் 
வானத்தை வில்லாய் 
வளைத்து உன் கைகளில்
 காணிக்கையாய் தருகிறேன் 

இவை அனைத்துமே என்னால் 
எளிதாக்க இயலும் ஏனென்றால் 
எனக்கு உலகமே நீதானே 
இவை எல்லாமே நீதானே 

உன்னை எடுத்து உன்னிடமே 
கொடுத்து விடுவேன் ....... 

முதல் கவிதை ...!!!!!

முதல் கவிதையை 
எழுதினேன் உனக்காக 
நீ வாசித்த பின் மீண்டும்
 நான் வாசித்தேன் ....

இதை கவிதை என்று 
யார் சொன்னது 
அங்கே இருந்தவை 
வார்த்தைகள் அல்ல.....
 
நீ ... நீயே தான் ... 
உன்னை கவிதை 
என்று யார் கூறுவார்கள் ????

Monday, September 12, 2011

இறந்தும் வாழ்வேன் ..!!!!

இறந்துவிட நினைக்கும் 
என்னை பார்த்து ஏன்
 கேவலமாக சிரிக்கிறாய்

 என்னை கோழை என்று
 எண்ணி விட்டாயா

நான் இறந்துபோக 
நினைப்பது என் உயிர் 
உடலை விட்டு பிரிந்து 
போகட்டும் என்பதற்காகஅல்ல...

 என் உயிரை உன் உயிரோடு 
இணைத்துகொள்ளதான் 

Saturday, September 10, 2011

என்னை தாக்கியது எது ????

எதற்க்காக நீ வேண்டும் இன்று ? 
என்னை தாக்கியது எது 
உனது அன்பா 
அரவணைப்பா 
ஆறுதல் வார்த்தைகளா 

நீ தந்த அந்த 
இனிமையான முத்தங்களா 
உன் கொஞ்சும் மொழிகளா 

எட்டி இருந்தபோதெல்லாம்
கட்டி அணைத்த நீ 
அருகில் வந்த போது 
ஏன் கண்களை மூடிகொண்டாய்

 கானல் நீரை கடலாய் கண்ட
 உன் கண்களுக்கு உண்மை 
கடல் கானல் நீராகி போனதோ ?

இமை பொழுதும் கண்களை 
இமைக்காமல் உன்னை 
ரசிக்க செய்தது எது ?

பாரமா ....? பாவமா ....?

ஒவ்வொரு நாளும் உன்னோடு 
சேர்ந்து பார்த்து ரசித்த 
அதே நிலவு இன்று என் 
கண்களுக்கு தணலாய் தகிக்கிறதே 

 உன் அருகில் இருக்கையில்
 நீரும் நெருப்பும் ஒன்றுதானே 
வீசி எறிந்தாலும் வாசத்தை 
விட்டு சென்ற மல்லிகையாய் நீ 

மடியிலிட்டு தாலாட்டிய குழந்தையை 
இன்று மண்ணில் தூக்கி
எரிந்து விட்டாயே 
பாரம் குறையும் என்றா 
பாவம் தீரும் என்றா ?



வஞ்சகர்கள் .........

உனது கையை தலையணையாய் 
நெஞ்சை பஞ்சணையாய் 
கொடுத்து உன் மார்போடு 
அணைத்து உறங்க வைத்த 

உன் அன்பு நெஞ்சில்
இன்று நஞ்சை விதைத்து 
விட்டார்களே வஞ்சகர்கள்

அவர்கள் விதைத்த நஞ்சை 
அவர்கள் தான் அறுவடை செய்ய 
போகிறார்கள் என்பதை 
எப்படி மறந்து போனார்கள் ? 

Friday, September 9, 2011

பாரம் சுமப்பது நீயும்தானே .....??

உனக்காக எல்லாமே உனக்காக
என்று கூற நினைக்கும்போதெல்லாம் 
எனக்காக எல்லாமே எனக்காக
 என்று வார்த்தைகள் வந்தது ஏன் ?

 இங்கு நீ வேறு நான் வேறு இல்லை 
என்பதால் சிலுவையை 
தூக்கி சார்த்திவிட்டாயே பாரம் 
சுமப்பது நீயும்தானே .....

இன்று பழியையும் 
பாவங்களையும் மட்டும் என்னை 
சுமக்க விட்டு பார்த்து நிற்கிறாயே ஏன் ?
பாசம் மறைத்து விலக்கியது
உன் உடலை அல்ல உன் உயிரை ....


நீயும் பாவம் என் இதயமும் பாவம் .....!!!!


நீ கோப படும்போதெல்லாம் 
தூர நின்று வேடிக்கை பார்த்தேன்
 நீ அன்பை பொழியும் போதெல்லாம்
 அத்தனை வருத்தங்களையும் 
தூர தூக்கி எறிந்தேன் 

உலகமே எட்டி உதைத்தாலும்
 உன் அன்பு என்னை கையில் 
ஏந்தி கொண்டபோது மருத்துபோன 
அனைத்தும் மறந்து போனதே 

காற்றில் மழையில் புயலில் 
சிக்கியபோதும் கலங்காத என் உள்ளம்
 உன் அன்பு பிடியில் சிக்கி 
தவித்தபோது அதை தாங்கும் 
சக்தி இல்லாமல் போனதே 

அன்னையின் மடியில் சாய 
தோன்றும்போதெல்லாம் 
என் அன்னையாய் 
அருகினில் இருந்தாயே

கண்ணீரையும் கொடுத்து
 துடைத்தும் விட்டாயே 
காயமும் தந்து மருந்தும் இட்டாயே 
இதயத்தில் புகுந்து ஓட்டையிட்டு ஒளிந்துகொண்டாயே 

இதய துடிப்பை நிறுத்திவிடு
இல்லை உள்ளிருந்து ஓடிவிடு 
ஒளிந்திருக்கும் நீயும் பாவம் 
ஓட்டையான இதயமும் பாவம் .....

வார்த்தைகள்......


உன் வார்த்தைகளுக்கு 
முக்கியத்துவம் தந்த நீ 
ஏன் உன் வாழ்க்கைக்கு 
முக்கியத்துவம் தரவில்லை ? 

வாழ்க்கைக்கும் வார்த்தைக்கும்
 அர்த்தம் விளங்கவில்லையா 
இல்லை வாய் பேச்சில் மட்டுமே 
வாழ்ந்துவிடலாம் என்று எண்ணி விட்டாயா ? 

மற்றவர் கூறும் வார்த்தைகள் 
என்றுமே பொய்யானவை அல்ல
 என்பதை உணர்ந்துகொள் 
நீ கூறும் வார்த்தைகளையும் 
பொய்யாக்கிவிடாதே

 உண்மையோ பொய்யோ 
வார்த்தைகளுக்கு வலிமை உண்டு 
அதிர்வுகள் உண்டு சக்தி உண்டு 
உனது வார்த்தைகளே  உனது வாழ்க்கை !!

பிரிவு .......


மனம் வாடும்போதேல்லாம் உன் நினைவு 
அதே மனம் ஆனந்தத்தில் 
துள்ளும்போதேல்லாம் உன் நினைவு 
ஆனால் நீ அருகினில்  இருக்கையில் 
உன் நினைவு வருவதே இல்லையே !!

உன்னை நினைப்பதற்கு 
பிரிவுதான் காரணம் என்றால் 
அதை ஆனந்தத்துடன் ஏற்றுகொள்கிறேன் 

உயிருடன் இருக்குக்கும் 
ஓவ்வொரு நிமிடமும் 
உன்னை நினைத்து கொண்டே 
இருக்கவே ஆசைபடுகிறேன் ........