உலகம் மறந்து
உன்னுடன் இருந்த
பொழுதுகளில் என்னை
ஒரு முறையேனும்
நினைத்திருக்கலாம் !!
உறக்கம் மறந்து
தவித்த பொழுதுகளில்
எல்லாம் உன்னை
மறந்திருக்கலாம் !!
உன் நினைவுகள்
என் நெஞ்சை அடைத்த
பொழுது எல்லாம் நிஜங்களை
உணர்ந்திருக்கலாம் !!
என் உள்ளத்தை
தாக்கிய சோகம் உடலை
தாக்க வந்தபோதாவது
நிமிர்ந்து ஒதுங்கி இருக்கலாம் !!
இன்று இங்கே
படுக்கையில் நான்
அங்கே பல்லக்கில் நீ !!!!
No comments:
Post a Comment