Total Pageviews

Saturday, September 17, 2011

காத்திருப்பேன் .......

பவுர்ணமி நிலவையே 
வெறுத்தேன் அமாவாசை 
அன்று உன்னை சந்தித்ததால் ...

கோடையில் நீ வாடினால் 
தென்றலாகி வருவேன்
 உன்னை தழுவிட .......

பாறையாக  நீ மாறினாலும் 
அதில் வாழும் 
தேரையாவேன் நான் .....

வானவில் என்று உன்னை
ஒருபோதும் வர்ணித்து 
இருக்க மாட்டேன் 

இப்படி வந்த வேகத்திலோ 
மறைந்து போவாய்
என்று தெரிந்திருந்தால் 

மீண்டும் வா 
காத்திருப்பேன் 
உனக்காக இங்கே ....

1 comment:

  1. பாறையாக நீ மாறினாலும்
    அதில் வாழும்
    தேரையாவேன் நான் .....]]


    Intha pathi ennai migavum kavarnthathu ...

    ReplyDelete