Total Pageviews

Sunday, April 10, 2011

உன் நினைவுகளை எடுத்து செல் !!

 அன்பே உன் நினைவுகளில்
மூழ்கி ஒற்றை மரமாய் நான்......

கர்ப்ப காலத்து அன்னையை
போல கவனம் முழுதும் உன்னிடத்தில் ......

நீர் குடித்த கார்மேகமாய்
உன் நினைவுகளை
சுமந்து செல்கிறேன் ......

திசை தெரியாத மரக்கலம்
பயணிப்பது போல உன்
நினைவலைகளில் சிக்கி

செல்லும் இடமும் சேரும்
இடமும் தெரியாமல் பயணித்து
கொண்டு இருக்கிறேன்

என் உயிர் பிரியும் முன்
உன் நினைவுகளை விட்டு
 செல்ல இடம் தேடவேண்டுமே .....

உனக்கும் என் நினைவிருந்தால்
என் நினைவுகளை தந்துவிட்டு
உன் நினைவுகளை எடுத்து செல்

1 comment:

  1. அன்பே உன் நினைவுகளில்
    மூழ்கி ஒற்றை மரமாய் நான்..//செல்வி..நீங்கள் ஒற்றை மரம்தான்...காட்டு மரங்கள் ஆயிரம் இருக்க , கற்பக விருட்சம் என்ற ஒற்றை மரமாய் நீங்கள்...வாழ்க செல்வி...

    ReplyDelete