Total Pageviews

Thursday, April 14, 2011

சூரியனுக்கு சொந்த காரி !!!!

நீ என்ன சூரியனுக்கு
சொந்த காரியா ....
மாலை வேளையில்
மறையும் சூரியனை
கண்டவர்  கண்களுக்கு
காண்பவை யாவுமே
ஆங்காங்கே சிவப்பாக
தோன்றுவதை போல
உன் முகத்தை பார்த்த
எனக்கு எதை பார்த்தாலும்
உன் முகமே தெரிகிறதே !!
உன்னை மன்றாடி
கேட்கிறேன் சிறிது நேரம்
என் கண்களை விட்டு
 விலகி செல் நான் காண
வேண்டிய காட்சிகள்
இன்னும் ஆயிரம் இங்கே ....!!

சுமை தாங்கி ... !!!!!!!!!!!!!!!!!!!!

ஏய் பெண்ணே உன்
கண்களில் கண்ணீரா ...!!!!

பலரின் கண்ணீரை
துடைத்தவள் நீ இன்று
 உன் கண்ணீரை துடைக்க
இன்னொரு ஆளா ...

பலரின் கண்ணீரை உன்
அன்பினால் விலை
பேசியவள் நீ இன்று
உன் கண்ணீரை கவலை
கொண்டு விலை பேசுகிறாயா ...

பலரின் சோக கண்ணீரை
ஆனந்த கண்ணீராக மாற்றி
தந்தவள் நீ இன்று உன்
கண்களில் சோக கண்ணீரா ...

பலரின் சோகங்களை
 சுமப்பவள் நீ இன்று
உன் சோகங்களை இறக்கி
 வைக்க இடம் தேடுகிறாயா ....

உன் அன்பின் நிழலில்
உறங்கும் அன்பு
உள்ளங்களின் உறக்கத்தை
உன் கண்ணீரை காட்டி
கலைத்து விடாதே !

வேண்டாம் பெண்ணே
வேண்டாம் நீ என்றுமே
சோகம் தாங்கும் சுமை தாங்கி!!

Tuesday, April 12, 2011

என் உருவமும் தான்...!!!!

சிறு குழந்தையாக இருந்தபோது 
வானத்தில் செல்லும் மேக 
கூட்டங்களை பார்த்து 
கற்பனையில் வடித்தேன் 
பல நூறு உருவங்கள் இன்றும்  
உன்னை நினைத்து அதே
கற்பனையில் பல நூறு 
வடிவங்களாக வடித்து 
கொண்டு இருக்கிறேன் 
உன்னை அன்று அந்த 
மேகங்களை காற்று வந்து 
கலைத்து விட்டு சென்றது
போல என் நினைவுகளில்
உருவங்களாக வடித்த 
உன்னை கலைத்து விடாதே
 கலைந்து போவது உன் 
உருவம் மட்டுமல்ல 
என் உருவமும் தான்...!!

உன் பாத சுவடுகள் ... !!

அந்த கரடு முரடான  பாதையில் 
வெகு தூரம் நடந்து சென்றேன் 
கால்கள் பொத்துபோயின 
மனதும் சலித்து விட்டது 
நடக்க இயலாமல் தவித்து 
போய் சோர்ந்து  அமர்ந்தேன்
மரத்தடியில்.. வழக்கம்போல 
சிந்தைனையில் உன் 
நினைவுகள் உன்னை 
நினைத்தால் நேரம் போவதே 
தெரியாதே சலிப்பெல்லாம்
மறந்து போகுமே ..எழுந்து 
நடந்தேன் பாதையில் புது 
மாற்றம் என்ன அழகான
ஒற்றையடி பாதை ஆங்காங்கே 
மலர்கள் ஆசையாய் நடந்தேன் 
அதன் வழியே... பிறகுதான் 
தெரிந்தது அது மலர்கள் 
அல்ல உன் பாத சுவடுகள் என்று ....

Monday, April 11, 2011

அன்னை ..............!!

மகனே நீ என்னை ஏறி 
மிதித்தாலும் எட்டி 
உதைத்தாலும் நான் 
உன் அன்னை உன்னால் 
நான் என்றுமே காயப்பட்டதில்லை
 நீ உண்ணாத போது நானும்
உண்டதில்லை நீ உறங்காத
போது நானும் உறங்கியதில்லை
பொருந்தாது என்று
தெரிந்திருந்தும் உன் 
காலடி தடத்திலெல்லாம்
என் காலடியை வைத்து 
பார்த்தேன் பலமுறை 
ஊர் போற்றும் அறிவாளியாக
 நான் இருந்தாலும் உனக்கு  முன் 
முட்டாளாகி போனேன் !!!!!

Sunday, April 10, 2011

உன் நினைவுகளை எடுத்து செல் !!

 அன்பே உன் நினைவுகளில்
மூழ்கி ஒற்றை மரமாய் நான்......

கர்ப்ப காலத்து அன்னையை
போல கவனம் முழுதும் உன்னிடத்தில் ......

நீர் குடித்த கார்மேகமாய்
உன் நினைவுகளை
சுமந்து செல்கிறேன் ......

திசை தெரியாத மரக்கலம்
பயணிப்பது போல உன்
நினைவலைகளில் சிக்கி

செல்லும் இடமும் சேரும்
இடமும் தெரியாமல் பயணித்து
கொண்டு இருக்கிறேன்

என் உயிர் பிரியும் முன்
உன் நினைவுகளை விட்டு
 செல்ல இடம் தேடவேண்டுமே .....

உனக்கும் என் நினைவிருந்தால்
என் நினைவுகளை தந்துவிட்டு
உன் நினைவுகளை எடுத்து செல்

Saturday, April 9, 2011

நிலவின் களங்கம் ....!!!!!!


நிலவு தூய்மையானது
 களங்கம் இல்லாதது என்று 
அறிந்திருந்தேன் உன்னை 
சந்தித்த நாள் முதல் நீயும் 
ஒரு நிலவாய் என் முன்னே 
ஆனால் அன்று பார்த்த 
அதே நிலவில் இன்று ஏதோ 
களங்கம் அன்று இது என் 
கண்களுக்கு தெரியவில்லையா 
இல்லை நான் கண்டு 
கொள்ளவில்லையா !! 
அடுத்தவரின் உதவியால் 
ஒளிரும் நிலவே நீ ஒரு
 நாள் மட்டும் உன்னை 
ஒளித்துகொள்வது உன் மனதில்
 உள்ள களங்கத்தினால் தானோ !!   
ஏய் நிலவே உன் தூய்மைதான் 
உன்னை விரும்ப வைத்தது 
உன் களங்கத்தை காட்டி 
உன்னை வெறுக்க வைக்காதே 
எப்போதும் நான் உந்தன் ரசிகன் !!!!

சுட்ட உண்மை .....!!!!!

உண்மை சில நேரங்களில் 
சுட்டுவிடும் பல நேரங்களில் 
கெட்டுவிடும் இன்று இங்கே
 நான் கேட்ட உண்மை என்னை 
சுட்டுவிட்டது வெட்டுபட்ட
 இடம் ஆறிவிடும் சுட்டுபட்ட
 இடம் நிறம் மாறிவிடும் திசை 
தெரியாத பறவைகள் எங்கோ
 சந்தித்து கொள்வது போல
நாம் இங்கே சந்தித்து கொண்டோம் 
பாதை மாறி பயணம் செய்ய 
விரும்பாமல் புது பாதையை 
தேர்ந்தெடுத்தோம் கரடு
 முரடான பாதையில் கால்கள்
 தான் பத்திவிடும் என்று
 நினைத்தேன் ஆனால் இங்கே 
பத்திவிட்டது மனம் சோதனை கால 
பக்தனை போல சோர்ந்து போய் 
இருக்கிறேன் கடற்கரையில் 
தாகத்துடன் நிற்கிறேன் என் 
தாகத்தை தணிக்க இந்த கடல் 
தான் வழி காட்ட வேண்டும் .......

மாற்றி தருகிறேன் உன்னை !!!

கடற்கரை மணலில் கைகளை
தூக்கி கொண்டாடும் குழந்தையாய்
உன்னை நினைத்திருந்தேன்
ஆனால் நீயோ கரும் இருளில்
வரும் கள்வனாகி போய் விட்டாயே !! 

பட்டாம் பூச்சியாய் பறந்து விடலாம்
என்று எண்ணி இருந்தேன்
கூட்டு புழுவாகவே இருந்துவிட
 கட்டளை இட்டாயே  !!  

என் கண்களின் வெண்மையும்
கருமையுமாக உன்னை
வைத்திருந்தேனே உதிர்ந்துபோன
 இமையாய் விழுந்து விட்டாயே !!

என் அன்பு தோட்டத்தின்
ஒற்றை ரோஜாவாய் உன்னை
வைத்திருந்தேன் பூக்கூடையில்
 போய் அமர்ந்து கொண்டாயே !!

கலை சிற்பமாய் உன்னை
வடித்து வைத்தேன் நீயோ
கல்லறை தோட்டத்தில்
சிலையாய் நின்றுகொண்டாயே !!

உன்னை என் கைகளில்
கொடு ஒரே வானின்
ஒற்றை நிலவாய்
மாற்றி தருகிறேன் ......!!!

காணாமல் போனாயே !! !! !!

தெளிந்த நீரோடையாய் 
இருந்த என் மனது  கல் 
எறிந்த குளத்தின் நீர் 
அலைகளை போல 
மாறிவிட்டது

 சூரியன் சந்திரன் விண்மீன்
வேறுபாடு இல்லாமல் இருந்த என்
 மனது  இன்று புது 
விண்மீனை கண்டது

ஊரார் அழுகையும் ஓசையாய்
கேட்கும் என் காதுகளில் 
குழந்தையின் குரலும் ஓலமாய் !!

இங்கே காதலனை  கண்ட 
காதலியாய் இருந்த என் மனது
 இன்று கீரியை கண்ட
 நாகமாய் மாறிவிட்டதே !!  

தென்றல் காற்றாய் 
வீசிகொண்டிருந்த என்னை
 கடும் புயலாய் மாற்றி விட்டாயே !!  

ஊமையாய் இருந்திருந்தால் 
வாய் மொழியாமல் 
இருந்திருப்பேன் ஆனால்
 இன்றோ வாய் பேச 
வார்த்தைகளையே தேட 
வைத்து விட்டாயே !!

 மூடிய இமைகளுக்கு முன் வந்த
 நீ இன்று திறந்திருந்தும் 
காணாமல் போனாயே !! 

கலைத்துவிட்டாய் நீ !!!!!!!

என்ன நிறம் என்றே அறிந்து
 கொள்ள இயலாத அந்த மாலை
 வேளையில்  என் கண் 
முன்னே உன் முகம் ....

மாலை நேர தென்றல் காற்றில் 
ஏக்கத்துடன் உன் முன்னே
 நான்....

 தாயை கண்ட கன்றாய் 
தவித்தோடி வந்தேன் ஒரு 
புறம் நாணம் மறுபுறம் 
மௌனம்

பார்வையால் வினவினாய் நீ
பார்வையற்று போனேன் நான்
கன்னத்தை வருடினாய் நீ
கண்கள் மருகி போனேன் நான்

 நிஜமாய் என் முன்னே நீ
இருக்கையில் உன் நிழலை
தேடினேன் நான்

சொந்தங்களை தொலைத்த
ஒற்றை பறவையாய் நான்
தோளோடு உரசியபடி நீ

மாலை நேர வெய்யிலில் மங்கலாய் 
தோன்றும் நிலவாய் நான்...
கரு மேகத்தில் என்னை 
ஒளித்துக்கொள்ள காற்றாய் 
வந்து கலைத்துவிட்டாய் நீ !!!

அன்பை தேடி..... !!!!!!!!!!!!!!!!!!!


அன்பை தேடி தேடி கால்கள் 
கடுக்க ஓடினேன் 
அலைந்தேன் திரிந்தேன் 
பித்து பிடித்தவளாகி போனேன் 
தேடிய இடமெல்லாம் 
வெறுமையாய் போனது 
இன்றோ அன்பு என்னை 
தேடி வந்தது ஆசையுடன் 
ஏற்றுக்கொண்டேன் 
ஆனால் அதை அனுபவிக்க 
முடியாமல் மூச்சு 
திணறி திக்கு முக்காடி 
தவித்து போய் நிற்கிறேன் 
இப்போதுதான் புரிகிறது 
அதை தாங்கி கொள்ளும் 
சக்தி எனக்கில்லை  
என்பதால் தான் நான்
தேடிய போதெல்லாம் 
 எனக்கிது கிடைக்கவில்லை 

Friday, April 8, 2011

அனைத்திற்கும் அர்த்தமானாய் நீ !!!!!!!!!!


"அன்பு" என்ற ஒன்றை 
வார்த்தையில் தான் 
அறிந்திருந்தேன் இன்றோ 
அன்பின் உருவமாய் 
என் முன்னே நீ ........

"காதல்" எழுத்துக்களில் 
தான் வாசித்து 
இருக்கிறேன் இன்றோ
 காதலின் வடிவமாய் 
என் முன்னே நீ ......

"பாசம்" பலர் கூறி 
கேள்வி பட்டிருக்கிறேன்
 இன்றோ அதன் 
ஊற்றாய் என்
 முன்னே நீ ......

"கருணை" கடவுளின் 
அடையாளம் என்று
 கூறினார்கள் இன்றோ 
கருணை மழையாய் 
என் முன்னே நீ ......

"அக்கறை" இது பிறருக்கு
 நான் காட்டியது 
இன்றோ எனக்காக 
அக்கறை பட
 என் முன்னே நீ ......

"தாய்" பாலூட்டி சீராட்டியவள் 
தான் என்று எண்ணி 
இருந்தேன் இன்றோ
அன்பால் அரவணைத்து 
தாயாய் என் முன்னே நீ ...

"வீடு" தங்கும் இடம் 
என்பது தான் தெரியும்
 இன்றோ உன் உள்ளம் 
எனக்கு நிரந்தர 
வீடாகி போனதே .... 

விண்மீன்களோடு விண்மீனாய் !!!!!

அந்த மழை காலத்தில்
 மழையின் சத்தத்துடன் 
என் மனதின் சத்தமும் 
ஆர்பரித்துகொண்டு 
இருந்தது நீரில் சிக்கிய 
காகித படகை போல 
நினைவுகளில் சிக்கி 
தவித்துகொண்டிருந்தேன் 
நான் வானத்து விண் 
மீன்களெல்லாம் கண் 
சிமிட்டி என்னை வா வா 
என்று அழைக்கின்றன 
அன்பே எனக்கு அனுமதி 
கொடு அங்கே சென்று 
விண்மீன்களோடு விண்மீனாய் 
அங்கிருந்து கொண்டு உன்னை 
அழைப்பேன் ஒரு நாள் ......

ஒரு பிரம்மை ...........

இனிமையான மாலை 
பொழுதில் அரை நிலவு 
வானத்தில் அமர்ந்திருந்தது .....
அதன் அழகை ரசித்தவாறு
 அங்கும் இங்குமாக 
 நடைபயணம் ... 
தென்னை மரத்தில் 
சிட்டுகளின் கீச் கீச் ஒலி 
தனிமையில் நான் 
ஆனாலும் யாரோ 
என்னுடன் பயணிப்பது 
போன்ற ஒரு பிரம்மை ..... 
இல்லை இது பிரம்மை இல்லை 
இது நிச்சயமான ஒரு நிகழ்வு 
என் அருகில் உருவமில்லாத 
பலர் பயணித்துக்கொண்டு 
இருக்கிறார்கள் ஆம் அவர்கள் 
வேறு யாருமல்ல சில 
எதிரிகளும் சில நண்பர்களும் 
தான் தம் நினைவுகளால்
என்னுடன் பயணிக்கின்றனர் .....

Monday, April 4, 2011

எனக்கு பிடித்தவை ..!!!!!!!!!!!

மலரை எனக்கு பிடிக்கும்
மற்றவரை மகிழ்விப்பதினால் !!

ஆசை எனக்கு பிடிக்கும்
ஏமாற்றம் தருவதினால் !!

ஏமாற்றம் எனக்கு பிடிக்கும்
கவலையை தருவதினால் !!

கவலையை எனக்கு பிடிக்கும்
அழுகையை தருவதினால் !!

அழுகையை எனக்கு பிடிக்கும்
கண்ணீரை தருவதினால் !!

கண்ணீரை எனக்கு பிடிக்கும்
கவலையை மறப்பதினால் !!

மழையை எனக்கு பிடிக்கும்
என் கண்ணீரை மறைப்பதினால் !!

என்னை தாலாட்டு .........

என் கன்னம் வருடி
உச்சி முகர்ந்து
என் கையோடு
கை சேர்த்து
என் மொழி கேட்டு
முகம் பார்த்து
கட்டி அணைத்து
என் நெற்றியில்
முத்தமிட்டு
ஒரே ஒரு முறை
என்னை தாலாட்டு !!

நீயே தேடு ..........!!!!!!!!!!!!

ஏய் வானம்பாடியே
உன் ஏக்க குரலை
கேட்கும்போதெல்லாம்
ஏனோ தெரியவில்லை
எனக்கும் உன்னோடு
சேர்ந்து கத்த வேண்டும்
போல் உள்ளது நீயாவது
தொலைந்துபோன  உன்
துணையை அழைக்கிறாய்
ஆனால் நான் யாரை அழைப்பது ....
என்ன சொல்லி அழைப்பது ....
எனக்காக இன்னொரு
முறை சத்தமிடு
என் துணையையும்
நீயே தேடு ...............

Saturday, April 2, 2011

குடிகாரன் !!!!!!!!!!!!!

தெருவில் குடித்துவிட்டு 
தள்ளாடிகொண்டிருந்த
ஒருவனை கைபிடித்து 
அழைத்துசென்றான் 
வாலிபன் ஒருவன் 
அங்கே சாலையோரம்
விட்ட குடிகாரன் தவறி 
விழுந்தான் சாக்கடையில் 
விழுந்தவன் எழுந்தமர்ந்தான்
வேதனையுடன் அவன்
முகத்தை கண்டவர்
அவனுக்கு பிச்சை போட்டார் 
ஒற்றை ரூபாய் அம்பது 
ரூபாய்க்கு சொந்தக்காரன 
ஆகிப்போனான் அரை 
நாழிகையில் மீண்டும் 
தள்ளாடியபடி நடந்தான்
 டாஸ்மாக் நோக்கி ...

சூரியனே பதில் கூறு ........

அந்தி வானத்தில் 
மலைகளுக்கு இடையில் 
மறைந்து கொண்டு 
பார்க்கும் சூரியனே 
என் மீது உனக்கு 
அப்படி என்ன பயம் 
என்னை பற்றி உன்னிடம் 
யாரும் தவறாக ஏதேனும் 
கூறி விட்டார்களா என்ன
 உன் அழகு முகத்தை
 இப்படி ஒளித்து வைப்பதால் 
என்ன பெருமை உனக்கு 
இவ்வளவு விரைவில் 
சென்று உறங்க நினைக்கிறாயே 
உன்னை ஒளித்து நிலவுக்கு
ஒளி கொடுக்க நினைக்கிறாயே 
நிலவுக்கும் உனக்கும் அப்படி 
என்ன பந்தம் இருவரும் 
பேசி  வைத்து இதனை 
முடிவு செய்தீர்களா 
நீ செல்லும் நேரத்தில் 
நிலவும் நிலவு செல்லும் 
நேரத்தில் நீயும் வருகிறீர்களே 
இது என்ன கண்ணாமுச்சு 
விளையாட்டு யாரை
ஏமாற்ற இப்படி ஒரு நாடகம்
எல்லோரும் உறங்கியபின்
இருவரும் ரகசியமாக
எங்கேனும் சந்தித்து 
கொள்கிறீர்களா என் 
கேள்விகளுக்கு விடையளித்து 
விட்டு நீ ஒளிந்துகொள் ...

Friday, April 1, 2011

கனாக்காலம் !!!!!!!!!!

இதே கடற்க்கரை மணலில் 
எத்தனை நாட்கள் நம்
இருவரும் கை கோர்த்து
நடந்தோம் உலகில் வேறு 
உயிர்களே இல்லை என்ற
நினைப்புடன் எத்தனை 
நாட்கள் மடியையே
தலையணையாய்
வானமே எல்லையாய்
அர்த்தமே இல்லாத கதைகளை 
அருகில் இருப்பவர்கள்
அறியாமலும் நேரம்
போவதே தெரியாமலும் பேசி 
ஆனந்த கூத்தாடிய அந்த 
கனாக்காலம் மீண்டும் 
எப்போது கிடைக்கும் ????

இரவின் நினைவுகள் !!!!!!!!!!!!!!!

அமைதியான இரவு சில்லென்ற 
தென்றல் தினமும் வீசும் 
அதே தென்றல் தான் என்றாலும் 
ஏனோ தெரியவில்லை
இன்று மட்டும் என்னை 
வருடிவிட்டு செல்வது போன்ற
உணர்வு எங்கோ தூரத்தில் 
நாய்கள் குரைக்கும்  சத்தம்
தூரத்தில் சாலையில் 
வாகனங்கள் ஊர்ந்து செல்லும்
 சத்தம் எல்லாமே இரவின்
 நிசப்தத்தை காட்டுகையில் 
என் அறையின் கடிகார
 முள்ளின் டிக் டிக் ஓசை மட்டும் 
உன் இதயம் துடிக்கும் ஓசையாய் 
என் காதுகளில் கற்பனையில் 
கண்களை மூடி உன் நினைவுகளை 
அசைபோட என் கண்களை 
உறக்கம் கவ்விக்கொள்ள 
கனவுலகில்உன்னோடு 
பயணிக்கிறேன் ..............