மேடம்
என்ற குரல் கேட்டு திரும்பியவள் கண்களை குறுக்கி நெற்றியை உயர்த்தி பார்த்தாள் எதிரில் இருந்த அந்த இளைஞனை , அவன் சிறிதாக புன்னகைதான் , நன்றாகத்தான் இருந்தது,
என்னய்யா அழைத்தீர்கள் ? என்று கேட்டாள் தங்கம் ,
ஆமாம் உங்களைத்தான் என்றான் அவன் ,ஒ அப்படியா நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாமா ? என்றாள்,
நான் உங்கள் நண்பர் ரவியின் நண்பன் ஏன் பெயர்
முரளி என்றான் , பெயரும் நன்றாக தான் இருந்தது, எதற்கு என்னை அழைத்தீர்கள் என்று வினவினாள், ரவி சொன்னார் மேடம் , உங்களை பற்றி நிறைய சொல்லி இருக்கிறார் என்றான் , அப்படியா ஆனால் ரவி என்னிடம் உங்களை பற்றி ஏதும் சொன்னதில்லையே என்றாள் ,
அது எனக்கு தெரியாது மேடம் , இங்கே பாருங்க இப்போ தான் ஐந்து நிமிடம் முன்னாடி பேசினோம், அப்போது கூட உங்களை பற்றி பேசினோம் என்றான் தன் கையில் இருந்த அந்த அழகிய அலை பேசியை காட்டி.
இருக்கட்டும் ஆனால் என்னிடம் ஏதும் கூற வில்லை ,
சரி பரவாயில்லை என்னிடம் தங்களுக்கு என்ன ஆக வேண்டும் ? என்றாள் , அதுவா மேடம் ஒன்றும் இல்லை மேடம் சும்மாதான் உங்களை பார்க்க வேண்டும் என்று தான்..... என்று ஏதேதோ பேசிக்கொண்டே போனான் , அட என்ன இவன் ஒன்றும் வேண்டாம் சும்மா எதற்கு பார்க்க வேண்டும் ?
பேசிக்கொண்டிருந்தவனை இடையில் தடுத்து எதாவது பண உதவி வேண்டுமா ? இல்லை நன்கொடை ஏதாவது வேண்டுமா என்றாள் , இல்லை மேடம் ம்... உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் , அதனால் உங்களிடம் பேச வேண்டும் என்றுதான் வந்தேன் , என்னுடன் பேசுவீர்களா ? எனக்கு உங்களுடைய நட்பு வேண்டும் , தவறாக நினைக்க வேண்டாம் மேடம் என்றான் , அட இவன் என்ன இப்படி பேசுகிறான் , விட்டால் காலில் விழுந்துவிடுவான் போல் இருக்கிறதே , சரி போகட்டும் என்னதான் பேசவேண்டும் இவனுக்கு என்னிடம் பார்க்கலாம் , என்று மனதுக்குள் நினது கொண்டு சரி பரவாயில்லை நட்பு வேண்டும் அவ்வளவு தானே இதில் என்ன தவறு ? நீங்கள் என் நண்பரின் நண்பர் என்றால் எனக்கும் நண்பரே , பரவாயில்லை நீங்கள் என்னிடம் எப்போது வேண்டுமானாலும் பேசலாம் என்று கூறினாள் தங்கம் , சில தினங்களில் இருவரும் மிக நெருங்கிய நண்பர்களாகி போனார்கள் , தங்கம் பேசுவதை முரளி மிகவும் ரசிப்பான், முரளி பேசுவதை தங்கமும் ரசிப்பாள், சில நேரங்களில் ரவ்யும் உடன் இருப்பான் , மூவரும் சேர்ந்தால் அவ்வளவுதான் ,
இப்படியாக இவர்களின் நட்பு தொடர்ந்தது, ஒரு நாள் வேறு ஒருவன் வந்தான், மற்றுமொரு நாள் வேறொரு நண்பர் இப்படியாக இவர்களின் நட்பு வட்டம் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போனது , சும்மா அமர்ந்து அரட்டை அடிப்பது மட்டுமல்லாமல் சில சமூக சேவைகளையும் இவர்கள் செய்ய ஆரம்பித்தார்கள் , இதன் மூலம் இவர்களின் நட்பு பற்றி நிறைய பேருக்கு தெரிய வந்தது ,மேலும் இவர்களின் நற் செயல்களை பார்த்த சிலர் இவர்களுக்கு பண உதவிகளையும் செய்ய முன் வந்தார்கள் .
இவர்களுன் உற்சாகம் இன்னும் அதிகமானது , இதனால் இலவச மருத்துவ ஊர்தி , ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி ,தெருவில் உள்ள குப்பைகளை அள்ளுதல் , இப்படி இவர்களின் தகுதிக்கேற்ப சேவைகளை செய்து வந்தார்கள். நட்பு என்ற பெயரில் பல அக்கிரமங்கள் நடக்கும் இந்த காலத்தில் இப்படி ஒரு நண்பர்கள் கூட்டமா ? நினைக்கவே ஆச்சர்யமாக இருக்கிறது
இவர்களின் நட்பு வட்டம் இன்னும் பெருக வேண்டும் , இவர்களின் சேவை இன்னும் தொடரவேண்டும் என்று பலர் பேசிகொள்கிரார்கள், இப்போது இவர்களின் சேவையை நாடி வருபவர் பலர், தொடரட்டும் இவர்களின் சேவை ... நட்புக்கு தோள் கொடுப்போம் , வெட்டி கதை பேசும் நண்பர் கூட்டத்திற்கு இது ஒரு படிப்பினையாக இருக்கட்டும் ... வாழ்க நண்பர் கூட்டம்