Total Pageviews

Tuesday, February 22, 2011

மழை !

சோவென்று மழை
அங்கே குடை பிடித்து
அசைந்து செல்லும் பலர் !

தன் முந்தானையை 
குழந்தையின் தலையில் போட்டு
ஓடுகிறாள் ஏழை தாய் !

இன்னும் வேகமாக தன்
கீற்றுகளை செலுத்தும் மழை
இன்னும் வேகமாக தாயின் ஓட்டம் !

மழை நினைத்தது அந்த தாய்
மழையில் ஆனந்தமாய்
ஓடுகிறாள் என்று

தாயின் மனதில் குழந்தை
நனையாமல் இருக்கவேண்டும்
வேண்டுமே என்ற வேகம்

இதில் யாரை குற்றம் சொல்வது ?
ஆனந்தமாய் கொட்டும் மழையையா
இல்லை அங்கே அயர்ந்து ஓடும்
அந்த ஏழை தாயையா ?

No comments:

Post a Comment