Total Pageviews

Thursday, February 24, 2011

மாயக்காரன் !

ஆனந்தமாய் ஓடி
வந்தேன் உன்னை காண
அருகில் இருந்தும் எங்கோ
தொலைவில் இருந்தேன்

கற்பனையில் உன் முகம்
பார்த்த நான் நேரில்
உன் முகம் பார்க்க
முடியாமல் தவித்தேன்

என் விரல் கோர்த்து முகம்
பார்த்து நீ சிரிக்கையில்
உலகமே மறந்து போனது
இடமே இருண்டு போனது

காதலும் இல்லை காமமும் இல்லை
காற்றினிலே நீ பேசினாய்
கண்முன்னே அமர்ந்தாய்
கள்வனை போல இருந்தாய்

இந்த மனவசியத்தை நீ
எங்கிருந்து கற்றாய் ?
ஐம்புலன்களையும் அரை
பொழுதில் அடக்கினாயே
உன் மந்திர சக்தியால்
கட்டுண்டு மதி
மயங்கியவர் எத்தனைபேர் ?
மாயக்காரனே பதில் கூறு

அன்பால் வலை விரிக்கும்
தந்திரத்தை எங்கிருந்து கற்றாய்
ஆறுதலாய் நீ பேசும்
பேச்சு எந்த மொழி

உன் அன்பை வேண்டி ஓடிய
நாட்கள் போயின  உன் அன்பை
காக்க ஒளிந்து கொள்ள
ஒரு இடம் தேவை இங்கே !



1 comment: