Total Pageviews

Wednesday, February 23, 2011

நீயே சொல்............ !!!!!!!!!!!!!!!!!

உன் வரவு எனக்கு புதியதுதான்
இருந்தாலும் என்னுள் நீ !

மலருக்குள் மணம்போல
எனக்குள் வந்தாய் நீ !

பழைய பொருள்களை போல
பெரும் பொக்கிஷமாய் நீ !

தூக்கி ஏறிய மனமில்லை
துடிக்கும் இதயமானாய் நீ !

ஒற்றையடி பாதையாய் அல்ல
காலடி தடமாய் நீ !

உடைந்த கண்ணாடியாய் அல்ல
ஒளிரும் ஓவியமாய் நீ !

புயலாய் வந்த புதியவனே
நீயே சொல் என்னுள் யார் நீ ?

No comments:

Post a Comment