இப்போது அது ஒரு சிறிய குடும்பம் அப்பா அம்மா வேலு . ஆனால் பத்து பதினைந்து வருடம் முன் இன்னும் இருவர் உடன் இருந்தனர் ஒன்று வேலுவின் அக்காள் , மற்றொன்று வேலுவின் தங்கை ஆனால் இப்போது இருவருமே திருமணம் முடித்து சென்றுவிட்டனர். வேலுவுக்கும் திருமணம் முடிந்து பல வருடம் ஆகிவிட்டது . ஆனால் மனைவியை விட்டு பிரிந்து இருக்கிறான் .
வேலுவுக்கு இளகிய மனது வறுமையில் ஒருவரை கண்டால் உடனே உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் , அவனுக்கு அப்படி ஒன்றும் பெரியாத சம்பாத்தியமும் இல்லை ஆன்னாலும் தனக்கு கிடைத்ததை வைத்து தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறான் .
மேலும் ரத்த தானம் செய்வதிலும் ஆர்வம் , ஊரில் எங்கு ரத்த தான முகாம் நடந்தாலும் முதல் ஆளாய் சென்று ரத்தம் வழங்கி விட்டு வருவான் . இப்படி பல நல்ல குணங்களை கொண்ட வேலு தனக்கு மீண்டும் திருமணம் செய்து வைக்கும்படி தன தாயிடம் பல முறை கேட்டிருக்கிறான் . அவனுக்கு பல இடங்களில் பெண் பார்த்துகொண்டிருக்கிறார்கள் .
அன்று காலையில் இருந்தே வேலுவின் முகம் வாட்டமாக இருந்தது . பல நாள் இப்படி இருந்திருக்கிறது . மனைவியை பிரிந்திருப்பதால் இப்படி இருக்கும் என வேலுவின் தாய் அமைதியாய் இருந்துவிடுவாள் . ஆனால் இப்போதெல்லாம் இவன் அடிக்கடி இப்படி ஆகி விடுகிறானே அது தான் ஏன் என்று தெரியவில்லை வேலுவின் தந்தை இடமும் இதை பற்றி கூறி இருக்கிறாள் சரி விடு அவனை தொந்தரவு செய்யாதே என்று அப்பா சொல்லி விடவே ஐவரும் அமைதியாய் இருந்துவிடுவார் .
சரி இன்று என்னதான் என்று கேட்டு விடுவோம் என்று நினைதா வேலுவின் தாய் என்னப்பா ஏன் ஒரு மாதிரி இருக்க உடம்பு ஏதும் சரி இல்லையா என்றாள்.ஆமாம் மா நேத்துல இருந்தே தல வலி , ராத்திரி சரியா தூங்கல . உடம்பு என்னமோ செய்யுது சென்றான் . இதை கேட்டதும் பதறிப்போன வேலுவின் தாய் அவனை தொட்டு பார்த்தாள். ஐயோ உடம்பு இப்படி நெருப்ப கொதிக்கிதே . வாப்பா மருத்துவ மனைக்கு பொய் வரலாம் என்று அழைத்து சென்றாள்.
வாப்பா வேலு வேலை எல்லாம் எப்படி போயிட்டிருக்கு என்றார் மருத்துவர் வேலுவை கண்டதும் . நல்லா போயடிருக்கு சார் என்றவனை தொடர்ந்த வேலுவின் தாய் இவனுக்கு தான் உடம்புக்கு முடியல அதான் கூட்டிட்டு வந்தேன் என்றாள் . ஓ அப்படியா என்று ஒரு ஆச்சர்யத்துடன் கேட்ட மருத்துவர் என்ன ஆச்சி வேலு . ஓடி ஓடி வேலை செய்வியே உணக்க உடல் நிலை சரி இல்லை என்றார் அவனை பரிசோதித்துகொண்டே .
ஒன்னும் இல்லப்பா வேலு சும்மா ஜுரம் அவ்வளவுதான் , என்று கூறி தேவையான மாத்திரைகளை கொடுத்து அனுப்பினார், அவர் சொன்னதுபோலவே அடுத்த நாள் சரி ஆகிவிட்டது . வழக்கம் போல ஓட ஆரம்பித்தான் வேலு .
பின்பொருநாள் வெளியில் செல்லும்போது ரத்த தான முகாமை கண்டான் . வழக்கம் போல உள்ளே சென்று அமர்ந்தான்.
முதலில் ரத்தத்தை பரிசோதனைக்கு எடுத்துக்கொண்ட மருத்தவர் ஐந்து நிமிடம் காத்திருக்க சொல்லிவிட்டு வந்தார் . வேலு இப்படி கொஞ்சம் வாங்க என்று தனியாக அழைத்து சென்றவர் அடுத்து கூறியதை கேட்டதும் தலை சுழன்று போனது . ஐயா இல்லை இருக்காது . மீண்டும் ஒருமுறை பாருங்கள் என்றான் வேலு . இல்லை தம்பி உங்களுக்கு எச் ஐ வி இருப்பது உண்மைதான் என்று உறுதியாக கூறினார் . அதிர்ச்சியில் வாயடைத்துபோய் வீட்டிருக்கு சென்று தன தாயிடம் கூறினான் .
வேலுவின் தாய் இதை நம்ப மறுத்துவிட்டாள், தங்கள் குடும்ப மருத்துவரிடம் அவனை அழைத்து சென்றாள் அவரும் பரிசோதித்து பார்த்துவிட்டு உண்மைதான் என்று கூறினார் . இது எப்படி சாத்தியமாகும் என்று பல் யோசனைகளுடன் இருவரும் வீட்டிற்கு வந்தனர் . அம்மா அவனிடம் பல வினாக்களை வினவினாள் . அம்மாவின் அனைத்து கேள்விகளுக்கும் எதையும் மறைக்காமல் பதில் அளித்த வேலு எதோ யோசனையில் ஆழ்ந்தான் . பிறகு ஒரு முடிவுக்கு வந்தவனை மருத்துவரை நோக்கி சென்றான் . அவரிடம் பல சந்தேகங்களை தீர்துகொண்டான் .
மருத்துவரை பார்த்துவிட்டு வந்ததிலிருந்து ஏதேதோ எண்ணங்களுடன் கவலையுடனும் இருந்த வேலு யோசித்தான் மருத்துவர் கூறியது போல் இது ரத்தத்தினால் தான் தனக்கு வந்திருக்க வேண்டும் . யோசித்தவன் முடிவாக தன் நண்பனிடம் வந்தான் தாங்கள் எப்போதும் அமரும் மரத்தடியில் அமர்ந்து அவனிடம் சில வினாக்களை எழுப்பினான் , உண்மைதான் அன்று தெருவில் பழம் விற்பவனிடம் இருந்து பழம் வாங்கி உண்டதன் விளைவு தான் இது . அவனுக்கு இந்த வியாதி இருந்திருக்கும் அதனால் தான் தனக்கும் வந்துவிட்டது என்று உணர்ந்ததும் பெரும் வேதனைக்கு உள்ளானான் . ஆனால் இதை யாரிடமும் கூற மனமில்லாமல் ஊமையாகிபோனான் . இதன்மூலம் தன்னை அவர்கள் வெறுக்க கூடும் என்பதால் இந்த முடிவுக்கு வந்தான் . இனி எந்த கடவுளை கும்பிட்டு என்ன பயன் ? யாரை நொந்துகொள்வது ? தன் வாழ்நாளை எண்ணிக்கொண்டிருந்தான் வேலு ....