அந்த இருள் சூழ்ந்த மாலை
வேளையில் மங்கிய
நிலவொளியில் கடற்கரை
மணலில் காலடி தடம்
பதித்து இருவரும் நிற்கையில்
அலைகளினூடே தெரிந்த நம்
இருவரின் நிழல் பிம்பங்களை
பார்த்த எனக்குள் கண நேர
சலனம் என்னை அறியாமலேயே
என் மனது உன்னை நேசிக்க
தொடங்கியது கட்டுப்பாட்டை
இழப்பதற்குள் விலகி
நின்றேன் விருப்பமில்லாமல்
ஆனாலும் என் நினைவுகளில்
உன் நிழல் பிம்பம் என்
ஆசைகள் எல்லை மீறும்
அன்று கட்டி அணைப்பேன்
நானும் உன்னை நிழலாய் ........
இது சரி இல்லையே...!
ReplyDeleteகடற்கரை காற்றினில் பிறந்த காதல் உணர்வு...இத்தனை அழகாய் இதை வார்த்தைகளில் வடித்தெடுத்த செல்விக்கு பாராட்டுக்கள் ...
ReplyDelete