Total Pageviews

Wednesday, June 8, 2011

நானும் நீ தானோ ?????

வானை பார்த்தால்   உன் நினைவு 
மேகத்தை பார்த்தால்  உன் நினைவு 

நிலவை பார்த்தால் உன் நினைவு 
விண் மீனை பார்த்தால் உன் நினைவு 

மரத்தை பார்த்தால் உன் நினைவு 
மலரை பார்த்தால் உன் நினைவு 

காக்கை பார்த்தால் உன் நினைவு 
கருங்குயிலை  பார்த்தால் உன் நினைவு

மழலையை பார்த்தால் உன் நினைவு 
மங்கையை பார்த்தால் உன் நினைவு 

கடலை பார்த்தால் உன் நினைவு
செம்மணலை பார்த்தால் உன் நினைவு 

உலகில் ஒவ்வொன்றும் உன்னை 
நினைவு படுத்தியதால் நான் என்னை 
பார்த்தேன் நானும் நீ தானோ ?????




ஏன் இப்படி ????????

 கலைந்தோடும் மேகங்களில் 
உன் உருவம் காணவில்லை ........ 

கடலின் நுரையில் 
உன் முகம் தெரியவில்லை ........

ஆற்றின் அலையில் 
உன் ஓசை இல்லை  ......

மலரும் மலரில்
உன் வாசமில்லை ......

பாடும் பறவையில் 
உன் குரல் இல்லை .....  

ஆனால் .....என்  இதயத்தில் 
மட்டும்  இடியாய் நீ ..........




உலகமே உன்னை சுற்றி...........

நிதானமாக நகரும்
கடிகார முள்ளை கேட்டேன்
உன் நினைவுகளை சுமந்து
செல்கிறேன் என்றது .......

ஓயாமல் கூவும் குயிலை
கேட்டேன் உன் பதில்
குரலுக்காக கூவிக்கொண்டு
இருக்கிறேன் என்றது ......

நீல வானின்
கருமேகங்களை கேட்டேன்
உன் சொல் கேட்டதும்
பொழிவேன் என்றது .....

மேகத்துள் ஒளிந்திருந்த
 வெண் நிலவை கேட்டேன்
உன் நிழலை காட்ட
வருவேன் என்றது ......

அந்தி வானின் ஆதவனை
 கேட்டேன் உன்னை
 உறங்க வைக்க
ஓடுகிறேன் என்றது .....

உலகமே உன்னை
 சுற்றி என்றால்
உன் நினைவுகள் மட்டும்
 என்னை சுற்றுவது ஏன் ??