Total Pageviews

Wednesday, June 8, 2011

உலகமே உன்னை சுற்றி...........

நிதானமாக நகரும்
கடிகார முள்ளை கேட்டேன்
உன் நினைவுகளை சுமந்து
செல்கிறேன் என்றது .......

ஓயாமல் கூவும் குயிலை
கேட்டேன் உன் பதில்
குரலுக்காக கூவிக்கொண்டு
இருக்கிறேன் என்றது ......

நீல வானின்
கருமேகங்களை கேட்டேன்
உன் சொல் கேட்டதும்
பொழிவேன் என்றது .....

மேகத்துள் ஒளிந்திருந்த
 வெண் நிலவை கேட்டேன்
உன் நிழலை காட்ட
வருவேன் என்றது ......

அந்தி வானின் ஆதவனை
 கேட்டேன் உன்னை
 உறங்க வைக்க
ஓடுகிறேன் என்றது .....

உலகமே உன்னை
 சுற்றி என்றால்
உன் நினைவுகள் மட்டும்
 என்னை சுற்றுவது ஏன் ??

No comments:

Post a Comment