Total Pageviews

Thursday, March 29, 2012

நினைவுகள் ஊஞ்சலாட....!!!!!!!!!

இரவு நேரம் நொடிகளாய் நகர
பகல் வேலை பல்லக்கில்
பவனி வர என் நெஞ்சில்
உன் நினைவுகள் ஊஞ்சலாட

உலகில் காணும்ஒவ்வொரு பொருளும்
உன்னை நினைவு படுத்த
ஓடிச்செல்ல இடமில்லாமல்
தவிக்கும் என் உள்ளம்

நலமா என்று நண்பன்
கேட்டால் கூட நலம்
என்று கூற நீ
இல்லையே அருகில்

உணவின் ஒவ்வொரு
பருக்கையும் உன்னை
நினைவுபடுத்த போராட்டம்

பசியின் கொடுமை ஒருபுறம்
வாட்டினாலும் உணவின்
ருசியை உணர்த்தியது உன்
கைகள் தானே .....!!!!!

இரவே முடிந்து போனது......!!!!

தனிமையாக இருக்க
எண்ணி ஓடினேன்
பல மைல் தூரம்.....

துரத்தினாய் உன் காதலால்
இரவுகள் எல்லாம் 
நீண்டு போனது .... 


உறக்கமே மறந்து 
போனது உன் முத்தத்தின்
சத்தம் மட்டும் காற்றின் ஒலியில்

இங்கே மவுனமாய் கேட்கும்
போது காதலே இல்லா
காவியமாய் நான் இங்கே


இந்த இரவின் நீளத்தைவிட 
உன் நினைவின்
நீளம் கொடுமையானது 


என் உறக்கத்துடன் 
உன் உறவின் நினைவு 
போட்டியிட இங்கே 
இரவே முடிந்து போனது......!!!!

சந்தோஷ நிமிடங்கள் !!!!!!!!!

ஒரு துளி கண்ணீரை பார்த்து
உயிர் துடிக்கும் நீ
இன்று உருண்டோடும்
கண்ணீரைக் கண்ண்டும்
உறுதியாய் நிற்பது ஏன் ??

என் கண்ணீரில்
உப்பில்லையா
அல்ல உன் கண்களில்
தெளிவில்லையா ??

என் புன்னகையின்
பின்னே ஒளிந்துள்ள
சோகம் நீ உணரும்
காலம் வருமா ??

கல்லில் பதித்த
தடமாய்இருந்த நம் காதல்
இன்று கடல் அலையில்
பதித்த கால் தடமாய் போனதோ ??

உன்னுடன் கழித்த
சந்தோஷ நிமிடங்கள்
அனைத்தும்இன்று
நிரந்தரமில்லாமல் போனதே ....!!

ஆனந்தமாய் வந்து
கால் தடத்தை அழித்து விட்டு போகும்
அலையே அதில் என் கண்ணீரும்
கலந்துள்ளது என்பதை மறவாதே !!!!

பிரிவின் வலி....!!!!

வார்த்தைகளால் இணைந்து
அன்பால் அருகில் அமர்ந்து

ஆறுதலாய் அணைத்து
இன்பமாய் வாழ்ந்த

நாட்கள் வெகுதூரம் போன பின்
பிரிவின் வலியை

உணராத உன்னிடம்
மன்றாடி என்ன பயன்??

உன் கைகளை
தலையனையாக்கி

முத்தங்களை மருந்தாக்கி
மயக்கத்தில் உறங்க

வைத்த மாயம் எல்லாம்
இன்று மனதில் காயங்களாய் ...

வலியின் வேதனையிலும்
மனம் தேடுவது

உன் அருகாமையை
மட்டும்தான் .............!!

அணைத்துக்கொள் அன்பே !! !!

கண்ணே உன்
கண்ணோடுகண்ணாய்
உயிரோடு உயிராய்

உடலோடு உடலாய்
வாழ்ந்த காலம் எல்லாம்
கனவாகிப்போனது இங்கே ...

உன்னுடன் நானும்
என்னுடன் நீயும்
இல்லை இன்று ....

ஒரு நாள் என்னைக்
காணும் ஆவலுடன் நீ
ஆனந்தமாய் ஓடி வருவாய் ...

அன்று என்
 உயிர் பிரிந்து
இமைகள் மூடி ...

வெற்றுடலாய் கட்டிலில்
காத்திருப்பேன்
உன்னைக் காண

அணைத்துக்கொள் அன்பே !! 

என் விருப்பத்திற்காக !!!

வாழ்க்கை வரலாறாக வேண்டும் 
என்ற ஆசையும் இல்லை 
வானத்தில் பரக்க வேண்டும்
என்ற ஆசையும் இல்லை !!

கண்களை மூடி இருந்தாலும்
உன் எண்ணம் 
காணும் காட்சிகள் 
எல்லாம் உன் வண்ணம் !!

கல்லில் வடித்த 
சிலையில் கடவுளை 
வழிபடும் மக்களை போல !! 

கண்ணில் படும் 
அனைத்திலும் 
உன் உருவம் காணும் 
குருடனாய் நான் !!

என் கண்ணில் படும்படி 
ஒருமுறையேனும் உலவு 
களவாணி போலாவது 
பார்த்துக்கொள்கிறேன் உன்னை !!

இயற்கையின் விருப்பத்திருக்கு
இல்லை உதிர்க்கும் மரம்போல
என் விருப்பத்திற்காக வந்துவிடு .....!!



நன்ம்பிக்கையுடன் ...!!!!!

கொடியில் பூத்த மலர்களை
மாலையாக தொடுத்தேன்

கொல்லையில் இருந்த வாசத்தை
குடிலுக்குள் கொண்டு வந்தேன்

சோகத்தையும் சந்தோஷத்தையும்
கவிதையில் வடித்தேன்

ஆசையையும் ஏக்கத்தையும்
பெருமூச்சாய் வெளியிட்டேன்

திருவிழாவில் தொலைந்த
குழந்தைபோல் கூட்டத்தில்

நான் தன்னந்தனியாய்
தவித்து நிற்கிறேன்

அன்னையாய் நீ வந்து
அழைத்து செல்வாய்
என்ற நன்ம்பிக்கையுடன் ...!!!

Wednesday, March 28, 2012

போராடும் புழுவாய் நான்..!!!!

காதல் தெய்வீகமானது
எல்லோரும் கூறுவது...!!

தேடாத காதல்தேடி வந்தது
அன்பின் வடிவில்...!!

 உலகையே ஆளும்
கர்வத்துடன் ஊரை சுற்றினேன் ...!!

திருடனை போல் வந்து
தென்றலாய் அழைத்து சென்றாய்...!!


காற்றை சுவாசித்ததைவிட
உன் மூச்சை சுவாசித்த நாட்களே ..!!


இப்போது நினைவில் நினைவுகள் 
நெஞ்சு கூட்டை சுட...!!


உயிருக்கு போராடும் 
புழுவாய் நான் இங்கே ....!!


இன்னும் சில காலம்
வாழ ஆசைபடுகிறேன் ....!!

உன் மூச்சு காற்றை
தருவாயா நான் சுவாசிக்க ??

இதயம் கல்லாகி போனதோ ???

கனவுகளுடனும் 
உன் நினைவுகளுடனும் 
வாழ்ந்த காலம் போதும்

உன் மேல் நான் கொண்ட 
அன்பிற்காக நீ கொடுத்த
பரிசு கண்ணீர் மட்டும்தானா 

நம் பிரிவு வாட்டுவது 
உன்னை அல்ல 
என்னை மட்டுமே  

பிரிவை உணரும் 
காலம் வருமா இங்கே 
யார் செய்த சதி இது 

கருணையும் காதலும் 
கொண்ட உன் இதயம் 
கல்லாகி போனதோ 

பாறையிலும் நீர்
சுரக்கும் என்பதை 
நினைவில் கொள் ..!!

நடை பிணமாய் நான் !!!!

வாழ்கையை தொடங்கும்போது
நினைத்த்ததில்லை நீ வருவாய்
என் வாழ்வில் என்று ....

விதி வலியது யாரை
எங்கு கொண்டு சேர்க்கும் என்றே தெரியாது
உன்னையும் என்னையும்
சேர்த்தது விதியா அதன் விளையாட்டா

என் உடலை மட்டும் விடுத்து
உயிரை பறித்து சென்றதே
நடை பிணமாய் நான் இங்கே

என் உள்ளாத்தின் சாவி
என்னிடம் இருந்திருந்தால்
உன்னை என்னுள்ளே
வைத்து பூட்டியிருப்பேனே ...!! 

நினைவுகள் குளிர்ச்சியாய்..!!!!

மழை பெய்யும்போதெல்லாம்
உன் நினைவுகள் குளிர்ச்சியாய்
ஓடும் மேகங்களிலும்
உன் நிழல் தேடினேன்

வருடி செல்லும்  காற்றில்
உன் வாசம் தேடினேன்
ஆடையின் வருடலில்
உன் ஸ்பரிசத்தை தேடினேன்

எதையும் காணாமல்
உன் குரல் மட்டும் இங்கே
என் காதுகளில்
ஒலித்துகொண்டிருக்க

உன் வார்த்தைகளை மட்டுமே
சுவாசித்துக்கொண்டிருக்கிறேன்
உயிருடன் ஒருநாள் உன்னை
அணைப்பேன் என் நம்பிக்கையில் ..!!

உயிருள்ள பிணம் !!

என் கரம் பிடித்து அரவணைத்து
ஆசையாய் அழைத்து  சென்றாய்

மழையில் நனைந்தேன்
வெயிலில் காய்ந்தேன்

காட்டிலும் மேட்டிலும் ஓடினேன்
இன்று என் கையை விட்டு விலகி சென்றாய்

நான் மட்டும் தனித்து தவித்து
தாய் இல்லா பிள்ளைபோல்

கண்ணீருடன் அனாதையாய்
உன்  நினைவுகளை சுமந்து

உயிருள்ள பிணமாய்
உயிரில்லா உறவுகளுடன் !!  

வந்துவிடு !!!!

உன்னை நினைத்தேன் 
கவிதை பாட ...
வார்த்தைகள் வராததால் 
நிலவை அழைத்தேன் துணைக்கு

அது என் நிழலை காட்டி மறுத்தது 
எனது மவுனத்தையே 
கவிதையாய் வடித்தேன்

உன் நினைவுகள் 
நெஞ்சில் அலைமோத 
என் கண்ணீரும்
இங்கே கவிதையாகிபோனது 

கண்ணீரை துடைக்க
உன் கைகள் இங்கே இல்லை 
என்றாலும் உன் வார்த்தைகள் 
சில துளிகளை தடுத்து விட்டதால்

அந்த துளிகளை இமைகள் தாங்கி 
நிற்கின்றன உன் வருகைக்காக 
வந்துவிடு இந்த 
கண்ணீரை தாங்குவதற்கு ....

Saturday, September 17, 2011

காத்திருப்பேன் .......

பவுர்ணமி நிலவையே 
வெறுத்தேன் அமாவாசை 
அன்று உன்னை சந்தித்ததால் ...

கோடையில் நீ வாடினால் 
தென்றலாகி வருவேன்
 உன்னை தழுவிட .......

பாறையாக  நீ மாறினாலும் 
அதில் வாழும் 
தேரையாவேன் நான் .....

வானவில் என்று உன்னை
ஒருபோதும் வர்ணித்து 
இருக்க மாட்டேன் 

இப்படி வந்த வேகத்திலோ 
மறைந்து போவாய்
என்று தெரிந்திருந்தால் 

மீண்டும் வா 
காத்திருப்பேன் 
உனக்காக இங்கே ....

என் மனதில் நீ !!!!

கல்லில் வடிக்கப்பட்ட 
சிலையில்லை நீ 
என் கைகளால் 
வரையப்பட்ட ஓவியம் ...... 

சூரியனை காண 
ஓடியதில்லை நான் 
எட்டு திக்கும்  நீயானதால் ..... 

நிழலுக்காக மரங்களை
தேடி ஓடியதில்லை நான் 
உன் அன்பு நிழலில் 
எப்போதும் வாழ்ந்ததால் .... 

பூக்களின் வாசம் 
முகர்ந்ததில்லை நான் 
என் சுவாசத்தில் நீ இருந்ததால் ..... 

உறங்க நினைத்ததில்லை
என் இமைகளில் 
நீ வாசம் செய்வதால் ....... 

பச்சை பாதையில்
பதிந்துவிட்ட பாதங்களை 
போல என் மனதில் நீ !!!!

உன்னை நான் அறிவேன் ......

நீ கற்களை வாரி 
இறைத்தபோது தடுத்தது
 எனக்கு வலிக்குமே 
என்பதற்காக அல்ல 
உனக்கு வலிக்குமே என்று ......

கைகளால் என்னை 
தாக்கியபோது உன்னை 
தடுத்தது எனதுவலிமையை 
காட்ட அல்ல உன் கை 
வலிக்குமே என்று ......

உன்னை நான் 
அறிவேன் 
நான் மட்டுமே
அறிவேன் ......

படுக்கையில் நான் பல்லக்கில் நீ !!!!

உலகம் மறந்து 
உன்னுடன் இருந்த 
பொழுதுகளில் என்னை
 ஒரு முறையேனும்
 நினைத்திருக்கலாம் !!

உறக்கம் மறந்து 
தவித்த பொழுதுகளில் 
எல்லாம் உன்னை 
மறந்திருக்கலாம் !!

உன் நினைவுகள் 
என் நெஞ்சை அடைத்த 
பொழுது எல்லாம் நிஜங்களை 
உணர்ந்திருக்கலாம் !!

என் உள்ளத்தை 
தாக்கிய சோகம் உடலை
தாக்க வந்தபோதாவது 
நிமிர்ந்து ஒதுங்கி இருக்கலாம் !!


இன்று இங்கே 
படுக்கையில் நான் 
அங்கே பல்லக்கில் நீ !!!! 

வேறுலகம் சென்றுவிட்டாயா ????

உன்னை பாட நினைத்தேன்
 ராகம் இல்லை

எழுத்தில் வடிக்க நினைத்தேன் 
வார்த்தைகள் இல்லை

கட்டி அணைக்க நினைத்தேன் 
நீ அருகில் இல்லை 

கனவில் வர வேண்டினேன் 
உறக்கம் இல்லை 

கண்களை மூடினேன் 
என் எண்ணங்களில் இல்லை 

வெருமையாக்கிவிட்டு 
வேறுலகம் சென்றுவிட்டாயா ????

இது நம்பிக்கையா ?? முட்டாள்தனமா ??

நாளை என்பது 
முட்டாள்களின் வார்த்தையாம் .... 

இல்லை அது நம்பிக்கையை 
கொடுத்த வார்த்தை அல்லவா ??? 

நீ நாளை வருவாய் 
நாளை வருவாய் என 
ஒவ்வொரு நாளும் 
எனக்கு நம்பிக்கை வருகிறதே !! 

நாளை என்ற ஒன்று 
இல்லையென்றால் 
என்றோ இறந்திருப்பேன் 
நான் உன் நினைவில் ..... 

எதிர்பார்கிறேன் 
நீ நாளை வருவாய் என ..... 
இது நம்பிக்கையா ??  
முட்டாள்தனமா ??

அமைதி காக்கிராயே !!!!

உன் புகைப்படத்தை கண்டதும் 
அத்தனை  தவிப்பு
உன் அருகாமைதான்
எத்தனை ஆனந்தம் ... 

சொர்கமே நீதானே
இன்று சூழ்நிலை 
கைதியாய் நீயும் 
சுமைதாங்கியாய் நானும் ..... 

விதியின் வலையில்
சிக்கித் தவிக்கும் போதெல்லாம் 
உன் அன்பால் மீட்டு சென்றாயே 
இன்று ஆபத்தில் இருந்து 
அமைதி காக்கிராயே !!

Tuesday, September 13, 2011

உலகமே நீதானே .......

அன்பே ஆணையிடு .....
உனக்காக மலையை பியர்த்து
 எடுத்து வருகிறேன்

 நிலவை கொண்டு வருகிறேன் 
வானத்தை வில்லாய் 
வளைத்து உன் கைகளில்
 காணிக்கையாய் தருகிறேன் 

இவை அனைத்துமே என்னால் 
எளிதாக்க இயலும் ஏனென்றால் 
எனக்கு உலகமே நீதானே 
இவை எல்லாமே நீதானே 

உன்னை எடுத்து உன்னிடமே 
கொடுத்து விடுவேன் ....... 

முதல் கவிதை ...!!!!!

முதல் கவிதையை 
எழுதினேன் உனக்காக 
நீ வாசித்த பின் மீண்டும்
 நான் வாசித்தேன் ....

இதை கவிதை என்று 
யார் சொன்னது 
அங்கே இருந்தவை 
வார்த்தைகள் அல்ல.....
 
நீ ... நீயே தான் ... 
உன்னை கவிதை 
என்று யார் கூறுவார்கள் ????

Monday, September 12, 2011

இறந்தும் வாழ்வேன் ..!!!!

இறந்துவிட நினைக்கும் 
என்னை பார்த்து ஏன்
 கேவலமாக சிரிக்கிறாய்

 என்னை கோழை என்று
 எண்ணி விட்டாயா

நான் இறந்துபோக 
நினைப்பது என் உயிர் 
உடலை விட்டு பிரிந்து 
போகட்டும் என்பதற்காகஅல்ல...

 என் உயிரை உன் உயிரோடு 
இணைத்துகொள்ளதான் 

Saturday, September 10, 2011

என்னை தாக்கியது எது ????

எதற்க்காக நீ வேண்டும் இன்று ? 
என்னை தாக்கியது எது 
உனது அன்பா 
அரவணைப்பா 
ஆறுதல் வார்த்தைகளா 

நீ தந்த அந்த 
இனிமையான முத்தங்களா 
உன் கொஞ்சும் மொழிகளா 

எட்டி இருந்தபோதெல்லாம்
கட்டி அணைத்த நீ 
அருகில் வந்த போது 
ஏன் கண்களை மூடிகொண்டாய்

 கானல் நீரை கடலாய் கண்ட
 உன் கண்களுக்கு உண்மை 
கடல் கானல் நீராகி போனதோ ?

இமை பொழுதும் கண்களை 
இமைக்காமல் உன்னை 
ரசிக்க செய்தது எது ?

பாரமா ....? பாவமா ....?

ஒவ்வொரு நாளும் உன்னோடு 
சேர்ந்து பார்த்து ரசித்த 
அதே நிலவு இன்று என் 
கண்களுக்கு தணலாய் தகிக்கிறதே 

 உன் அருகில் இருக்கையில்
 நீரும் நெருப்பும் ஒன்றுதானே 
வீசி எறிந்தாலும் வாசத்தை 
விட்டு சென்ற மல்லிகையாய் நீ 

மடியிலிட்டு தாலாட்டிய குழந்தையை 
இன்று மண்ணில் தூக்கி
எரிந்து விட்டாயே 
பாரம் குறையும் என்றா 
பாவம் தீரும் என்றா ?



வஞ்சகர்கள் .........

உனது கையை தலையணையாய் 
நெஞ்சை பஞ்சணையாய் 
கொடுத்து உன் மார்போடு 
அணைத்து உறங்க வைத்த 

உன் அன்பு நெஞ்சில்
இன்று நஞ்சை விதைத்து 
விட்டார்களே வஞ்சகர்கள்

அவர்கள் விதைத்த நஞ்சை 
அவர்கள் தான் அறுவடை செய்ய 
போகிறார்கள் என்பதை 
எப்படி மறந்து போனார்கள் ? 

Friday, September 9, 2011

பாரம் சுமப்பது நீயும்தானே .....??

உனக்காக எல்லாமே உனக்காக
என்று கூற நினைக்கும்போதெல்லாம் 
எனக்காக எல்லாமே எனக்காக
 என்று வார்த்தைகள் வந்தது ஏன் ?

 இங்கு நீ வேறு நான் வேறு இல்லை 
என்பதால் சிலுவையை 
தூக்கி சார்த்திவிட்டாயே பாரம் 
சுமப்பது நீயும்தானே .....

இன்று பழியையும் 
பாவங்களையும் மட்டும் என்னை 
சுமக்க விட்டு பார்த்து நிற்கிறாயே ஏன் ?
பாசம் மறைத்து விலக்கியது
உன் உடலை அல்ல உன் உயிரை ....


நீயும் பாவம் என் இதயமும் பாவம் .....!!!!


நீ கோப படும்போதெல்லாம் 
தூர நின்று வேடிக்கை பார்த்தேன்
 நீ அன்பை பொழியும் போதெல்லாம்
 அத்தனை வருத்தங்களையும் 
தூர தூக்கி எறிந்தேன் 

உலகமே எட்டி உதைத்தாலும்
 உன் அன்பு என்னை கையில் 
ஏந்தி கொண்டபோது மருத்துபோன 
அனைத்தும் மறந்து போனதே 

காற்றில் மழையில் புயலில் 
சிக்கியபோதும் கலங்காத என் உள்ளம்
 உன் அன்பு பிடியில் சிக்கி 
தவித்தபோது அதை தாங்கும் 
சக்தி இல்லாமல் போனதே 

அன்னையின் மடியில் சாய 
தோன்றும்போதெல்லாம் 
என் அன்னையாய் 
அருகினில் இருந்தாயே

கண்ணீரையும் கொடுத்து
 துடைத்தும் விட்டாயே 
காயமும் தந்து மருந்தும் இட்டாயே 
இதயத்தில் புகுந்து ஓட்டையிட்டு ஒளிந்துகொண்டாயே 

இதய துடிப்பை நிறுத்திவிடு
இல்லை உள்ளிருந்து ஓடிவிடு 
ஒளிந்திருக்கும் நீயும் பாவம் 
ஓட்டையான இதயமும் பாவம் .....

வார்த்தைகள்......


உன் வார்த்தைகளுக்கு 
முக்கியத்துவம் தந்த நீ 
ஏன் உன் வாழ்க்கைக்கு 
முக்கியத்துவம் தரவில்லை ? 

வாழ்க்கைக்கும் வார்த்தைக்கும்
 அர்த்தம் விளங்கவில்லையா 
இல்லை வாய் பேச்சில் மட்டுமே 
வாழ்ந்துவிடலாம் என்று எண்ணி விட்டாயா ? 

மற்றவர் கூறும் வார்த்தைகள் 
என்றுமே பொய்யானவை அல்ல
 என்பதை உணர்ந்துகொள் 
நீ கூறும் வார்த்தைகளையும் 
பொய்யாக்கிவிடாதே

 உண்மையோ பொய்யோ 
வார்த்தைகளுக்கு வலிமை உண்டு 
அதிர்வுகள் உண்டு சக்தி உண்டு 
உனது வார்த்தைகளே  உனது வாழ்க்கை !!

பிரிவு .......


மனம் வாடும்போதேல்லாம் உன் நினைவு 
அதே மனம் ஆனந்தத்தில் 
துள்ளும்போதேல்லாம் உன் நினைவு 
ஆனால் நீ அருகினில்  இருக்கையில் 
உன் நினைவு வருவதே இல்லையே !!

உன்னை நினைப்பதற்கு 
பிரிவுதான் காரணம் என்றால் 
அதை ஆனந்தத்துடன் ஏற்றுகொள்கிறேன் 

உயிருடன் இருக்குக்கும் 
ஓவ்வொரு நிமிடமும் 
உன்னை நினைத்து கொண்டே 
இருக்கவே ஆசைபடுகிறேன் ........

Wednesday, June 8, 2011

நானும் நீ தானோ ?????

வானை பார்த்தால்   உன் நினைவு 
மேகத்தை பார்த்தால்  உன் நினைவு 

நிலவை பார்த்தால் உன் நினைவு 
விண் மீனை பார்த்தால் உன் நினைவு 

மரத்தை பார்த்தால் உன் நினைவு 
மலரை பார்த்தால் உன் நினைவு 

காக்கை பார்த்தால் உன் நினைவு 
கருங்குயிலை  பார்த்தால் உன் நினைவு

மழலையை பார்த்தால் உன் நினைவு 
மங்கையை பார்த்தால் உன் நினைவு 

கடலை பார்த்தால் உன் நினைவு
செம்மணலை பார்த்தால் உன் நினைவு 

உலகில் ஒவ்வொன்றும் உன்னை 
நினைவு படுத்தியதால் நான் என்னை 
பார்த்தேன் நானும் நீ தானோ ?????




ஏன் இப்படி ????????

 கலைந்தோடும் மேகங்களில் 
உன் உருவம் காணவில்லை ........ 

கடலின் நுரையில் 
உன் முகம் தெரியவில்லை ........

ஆற்றின் அலையில் 
உன் ஓசை இல்லை  ......

மலரும் மலரில்
உன் வாசமில்லை ......

பாடும் பறவையில் 
உன் குரல் இல்லை .....  

ஆனால் .....என்  இதயத்தில் 
மட்டும்  இடியாய் நீ ..........




உலகமே உன்னை சுற்றி...........

நிதானமாக நகரும்
கடிகார முள்ளை கேட்டேன்
உன் நினைவுகளை சுமந்து
செல்கிறேன் என்றது .......

ஓயாமல் கூவும் குயிலை
கேட்டேன் உன் பதில்
குரலுக்காக கூவிக்கொண்டு
இருக்கிறேன் என்றது ......

நீல வானின்
கருமேகங்களை கேட்டேன்
உன் சொல் கேட்டதும்
பொழிவேன் என்றது .....

மேகத்துள் ஒளிந்திருந்த
 வெண் நிலவை கேட்டேன்
உன் நிழலை காட்ட
வருவேன் என்றது ......

அந்தி வானின் ஆதவனை
 கேட்டேன் உன்னை
 உறங்க வைக்க
ஓடுகிறேன் என்றது .....

உலகமே உன்னை
 சுற்றி என்றால்
உன் நினைவுகள் மட்டும்
 என்னை சுற்றுவது ஏன் ??

Tuesday, May 10, 2011

இன்னும் எத்தனை பேர் ..... ????

ஏய் கொலை காரியே 
பலவிதமான கொலைகளை 
பற்றி கேள்வி பட்டிருக்கிறேன்

உள்ளிருக்கும் இதயத்தை 
ஓட்டையிடாமல் உடைத்தெடுக்கும் 
இந்த புதுமையான கொலையை 
உன்னால் மட்டுமே செய்ய இயலும் 
 என்று நினைக்கிறேன் 

சொல் அம்பு என்று 
கேள்வி பட்டிருக்கிறேன் 
ஆனால் உன் ஓவ்வொரு 
சொல்லிலும் ஈட்டி அல்லவா 
வைத்து எய்கிறாய் 

நீ என்ன கொலை களத்தில்
பணி புரிந்தாயா இல்லை இந்த 
கொலை செய்யும் வித்தையை 
எங்கேனும் கற்று வந்தாயா 

என்னை போன்று இன்னும் 
எத்தனை பேர்களின் இதயத்தை 
இப்படி உரு தெரியாமல் 
உடைதெடுத்தாய்

உன் கொலை பட்டியலில் 
இன்னும் எத்தனை பேர்  போதும் 
விட்டுவிடு இதயத்தை தேடி 
அலையும் இதயங்களை விட்டுவிடு  ....

நீ விளையாட ........!!!!

தூரத்தில் இருந்த வரை 
என்னை நிலவை போல ரசித்தாய் 
அருகில் வந்ததும் என்னில் 
களங்கம் காண்கிறாய் 

விலகி செல்லவும் விடாமல்
வழி மறித்து நிற்கிறாய் 
விருப்பமே இல்லாமல் 
விரும்பி வருகிறாய் 

குழந்தையாய் இருந்தவளை 
குரங்காய் மாற்றினாய்
குதிக்க விடாமல் 
கட்டி போட்டாய் 

இன்னும் என்னென்ன 
செய்ய போகிறாய் 
என்று என்னிடம் கூறு 

உயிருள்ள என்னை 
உயிரற்றவளாக்கி 
தருகிறேன் நீ விளையாட ........

புது அனுபவம் ....!!!!!!!


புரியாத இடம் புது விதமான 
மரங்கள் செடிகள் கொடிகள் 
புது விதமான கட்டிடங்கள்

இயற்கையான சூழலின் 
மனதை மயக்கும் காற்று
இன்னும் என்ன சொல்ல 

 மக்களின் மனதில் என்னதான்
உள்ளது என்று  புரிந்து 
கொள்ள இயலாத நிலை

தாங்கள் எங்கு செல்கிறோம் 
எதற்க்காக செல்கிறோம் என்று 
தன்னிலை மறந்தபயணம்

இயந்திர வாழ்கையை 
பழகிப்போன மக்களுக்கு இது 
போன்ற புது இடம் புது வாழ்க்கை

வார்த்தைகளால்வடிக்க இயலாத 
நிலை எப்படி ஆனாலும்
இது நிச்சயம் ஒரு புது அனுபவம் ....

Friday, May 6, 2011

பிரிந்து சென்று விடு .....!!!!!

அன்பே தெய்வமாய்
அமைதியே வாழ்க்கையாய் 
தூரத்தில் தோன்றிய நதி 
போல் செல்லும் தடமும் 
சேரும் இடமும் அறியாமல் 
பயணித்து கொண்டு இருந்த 
என்னுள் இடையில் இணைந்த 
ஓடையாய் நீ வந்து கலந்தாய்
திசையே தெரியாமல் நான் 
பயணிக்க எந்த நம்பிக்கையில் 
நீ வந்து என்னுடன் சேர்ந்தாய் 
எனது இந்த பயணத்தில் 
இடையூறு இல்லாமல் 
பயணிக்கும் துணிவு 
உனக்கிருந்தால் என்னுடன் வா 
இல்லையேல் தடம் மாறி 
ஓடையாகவே பிரிந்து சென்று விடு .....

நாள் காட்டியா இல்லை திசை காட்டியா ... !!!

தொலை தூர பயணத்தில் 
துணையாய் வந்தவனே 
பல வழி தடங்களில்
பல முறை பலரோடு 
பயணம் செய்த எனக்கு 
இந்த பயணம் மட்டும் 
ஏனோ புதிதாய் !! 

வாழ்கை பயணத்தில் 
திக்கு தெரியாமல் 
பயணித்து கொண்டு 
இருந்த எனக்கு திசையை 
காட்டி என் பாதையையும் 
மாற்றினாயே  நீ என்ன நாள் 
காட்டியா இல்லை திசை காட்டியா ... 

இந்த புதிய பயணத்தில்
உன்னுடன் ஆனந்தமாய்
கை கோர்த்து பயணிக்கும்
எனக்கு ஆண்டவனாய் 
இல்லை என்றாலும் 
ஆதவனாய் நின்று வழி காட்டு !!!!

விலகி விலகி செல்கிறாயே !!!!!!

அன்பை வேண்டி அனுதினமும் 
ஆவலாய் ஓடோடி வந்தேன் 
அருகில் வந்தபோது அன்பை 
ஊட்டினாய் அதையே வேண்டினாய்  !!

விலகி சென்ற நேரம் பார்த்து 
விருப்பம் இல்லாததை விரும்பி 
செய்து விலகி விலகி சென்றாயே !!

கொடுத்த அன்பையும் குற்றம் 
காணும் அளவுக்கு நான் 
குனிந்து நின்றேனே !!

தெரிந்தும் தெரியாமல் நாடகமாடி 
நீ ஏமாற்றுவது என்னை 
அல்ல உன் உயிரை 
என்பதை மறந்துவிடாதே !!

நெஞ்சம் வாடும் போதெல்லாம் 
தஞ்சம் நீயே என்று அங்கே 
உன்னிடம் கொஞ்சி 
விளையாடியதும் நான் தானே !!

புரிந்து கொள் ...புரிந்து கொள் ...!!!!!

அமைதியாக ஊர்ந்து 
செல்லும் ரயிலின் 
இருக்கையில் அன்னையாய்
நீயும் உன் மடியில் 
அன்பு குழந்தையாய் நானும் 

இரக்கமே இல்லாமல் நான் உறங்க
அன்பும் பாசமும் உன் கண்ணில் 
ஏக்கமும் தவிப்பும்என் நெஞ்சில்
கனிவுடன் என்னை கவனிக்க நீயும்
கண்ணீரை அடக்க மாட்டாமல் நானும் 

உண்மை அன்பை 
மட்டுமே கேட்ட நான் 
இன்று வாய் பேச 
மாட்டாமல் ஊமையாய் 
உன் முன்னே ....

உள்ளம் என்று ஒன்று 
உனக்கிருந்தால் என்
உண்மை அன்பை
புரிந்து கொள் ...