Total Pageviews

Friday, May 6, 2011

புரிந்து கொள் ...புரிந்து கொள் ...!!!!!

அமைதியாக ஊர்ந்து 
செல்லும் ரயிலின் 
இருக்கையில் அன்னையாய்
நீயும் உன் மடியில் 
அன்பு குழந்தையாய் நானும் 

இரக்கமே இல்லாமல் நான் உறங்க
அன்பும் பாசமும் உன் கண்ணில் 
ஏக்கமும் தவிப்பும்என் நெஞ்சில்
கனிவுடன் என்னை கவனிக்க நீயும்
கண்ணீரை அடக்க மாட்டாமல் நானும் 

உண்மை அன்பை 
மட்டுமே கேட்ட நான் 
இன்று வாய் பேச 
மாட்டாமல் ஊமையாய் 
உன் முன்னே ....

உள்ளம் என்று ஒன்று 
உனக்கிருந்தால் என்
உண்மை அன்பை
புரிந்து கொள் ...

No comments:

Post a Comment