அன்பை வேண்டி அனுதினமும்
ஆவலாய் ஓடோடி வந்தேன்
அருகில் வந்தபோது அன்பை
ஊட்டினாய் அதையே வேண்டினாய் !!
விலகி சென்ற நேரம் பார்த்து
விருப்பம் இல்லாததை விரும்பி
செய்து விலகி விலகி சென்றாயே !!
கொடுத்த அன்பையும் குற்றம்
காணும் அளவுக்கு நான்
குனிந்து நின்றேனே !!
தெரிந்தும் தெரியாமல் நாடகமாடி
நீ ஏமாற்றுவது என்னை
அல்ல உன் உயிரை
என்பதை மறந்துவிடாதே !!
நெஞ்சம் வாடும் போதெல்லாம்
தஞ்சம் நீயே என்று அங்கே
உன்னிடம் கொஞ்சி
விளையாடியதும் நான் தானே !!
No comments:
Post a Comment