ஏய் கொலை காரியே
பலவிதமான கொலைகளை
பற்றி கேள்வி பட்டிருக்கிறேன்
உள்ளிருக்கும் இதயத்தை
ஓட்டையிடாமல் உடைத்தெடுக்கும்
இந்த புதுமையான கொலையை
உன்னால் மட்டுமே செய்ய இயலும்
என்று நினைக்கிறேன்
சொல் அம்பு என்று
கேள்வி பட்டிருக்கிறேன்
ஆனால் உன் ஓவ்வொரு
சொல்லிலும் ஈட்டி அல்லவா
வைத்து எய்கிறாய்
நீ என்ன கொலை களத்தில்
பணி புரிந்தாயா இல்லை இந்த
கொலை செய்யும் வித்தையை
எங்கேனும் கற்று வந்தாயா
என்னை போன்று இன்னும்
எத்தனை பேர்களின் இதயத்தை
இப்படி உரு தெரியாமல்
உடைதெடுத்தாய்
உன் கொலை பட்டியலில்
இன்னும் எத்தனை பேர் போதும்
விட்டுவிடு இதயத்தை தேடி
அலையும் இதயங்களை விட்டுவிடு ....