Total Pageviews

Tuesday, May 10, 2011

இன்னும் எத்தனை பேர் ..... ????

ஏய் கொலை காரியே 
பலவிதமான கொலைகளை 
பற்றி கேள்வி பட்டிருக்கிறேன்

உள்ளிருக்கும் இதயத்தை 
ஓட்டையிடாமல் உடைத்தெடுக்கும் 
இந்த புதுமையான கொலையை 
உன்னால் மட்டுமே செய்ய இயலும் 
 என்று நினைக்கிறேன் 

சொல் அம்பு என்று 
கேள்வி பட்டிருக்கிறேன் 
ஆனால் உன் ஓவ்வொரு 
சொல்லிலும் ஈட்டி அல்லவா 
வைத்து எய்கிறாய் 

நீ என்ன கொலை களத்தில்
பணி புரிந்தாயா இல்லை இந்த 
கொலை செய்யும் வித்தையை 
எங்கேனும் கற்று வந்தாயா 

என்னை போன்று இன்னும் 
எத்தனை பேர்களின் இதயத்தை 
இப்படி உரு தெரியாமல் 
உடைதெடுத்தாய்

உன் கொலை பட்டியலில் 
இன்னும் எத்தனை பேர்  போதும் 
விட்டுவிடு இதயத்தை தேடி 
அலையும் இதயங்களை விட்டுவிடு  ....

நீ விளையாட ........!!!!

தூரத்தில் இருந்த வரை 
என்னை நிலவை போல ரசித்தாய் 
அருகில் வந்ததும் என்னில் 
களங்கம் காண்கிறாய் 

விலகி செல்லவும் விடாமல்
வழி மறித்து நிற்கிறாய் 
விருப்பமே இல்லாமல் 
விரும்பி வருகிறாய் 

குழந்தையாய் இருந்தவளை 
குரங்காய் மாற்றினாய்
குதிக்க விடாமல் 
கட்டி போட்டாய் 

இன்னும் என்னென்ன 
செய்ய போகிறாய் 
என்று என்னிடம் கூறு 

உயிருள்ள என்னை 
உயிரற்றவளாக்கி 
தருகிறேன் நீ விளையாட ........

புது அனுபவம் ....!!!!!!!


புரியாத இடம் புது விதமான 
மரங்கள் செடிகள் கொடிகள் 
புது விதமான கட்டிடங்கள்

இயற்கையான சூழலின் 
மனதை மயக்கும் காற்று
இன்னும் என்ன சொல்ல 

 மக்களின் மனதில் என்னதான்
உள்ளது என்று  புரிந்து 
கொள்ள இயலாத நிலை

தாங்கள் எங்கு செல்கிறோம் 
எதற்க்காக செல்கிறோம் என்று 
தன்னிலை மறந்தபயணம்

இயந்திர வாழ்கையை 
பழகிப்போன மக்களுக்கு இது 
போன்ற புது இடம் புது வாழ்க்கை

வார்த்தைகளால்வடிக்க இயலாத 
நிலை எப்படி ஆனாலும்
இது நிச்சயம் ஒரு புது அனுபவம் ....

Friday, May 6, 2011

பிரிந்து சென்று விடு .....!!!!!

அன்பே தெய்வமாய்
அமைதியே வாழ்க்கையாய் 
தூரத்தில் தோன்றிய நதி 
போல் செல்லும் தடமும் 
சேரும் இடமும் அறியாமல் 
பயணித்து கொண்டு இருந்த 
என்னுள் இடையில் இணைந்த 
ஓடையாய் நீ வந்து கலந்தாய்
திசையே தெரியாமல் நான் 
பயணிக்க எந்த நம்பிக்கையில் 
நீ வந்து என்னுடன் சேர்ந்தாய் 
எனது இந்த பயணத்தில் 
இடையூறு இல்லாமல் 
பயணிக்கும் துணிவு 
உனக்கிருந்தால் என்னுடன் வா 
இல்லையேல் தடம் மாறி 
ஓடையாகவே பிரிந்து சென்று விடு .....

நாள் காட்டியா இல்லை திசை காட்டியா ... !!!

தொலை தூர பயணத்தில் 
துணையாய் வந்தவனே 
பல வழி தடங்களில்
பல முறை பலரோடு 
பயணம் செய்த எனக்கு 
இந்த பயணம் மட்டும் 
ஏனோ புதிதாய் !! 

வாழ்கை பயணத்தில் 
திக்கு தெரியாமல் 
பயணித்து கொண்டு 
இருந்த எனக்கு திசையை 
காட்டி என் பாதையையும் 
மாற்றினாயே  நீ என்ன நாள் 
காட்டியா இல்லை திசை காட்டியா ... 

இந்த புதிய பயணத்தில்
உன்னுடன் ஆனந்தமாய்
கை கோர்த்து பயணிக்கும்
எனக்கு ஆண்டவனாய் 
இல்லை என்றாலும் 
ஆதவனாய் நின்று வழி காட்டு !!!!

விலகி விலகி செல்கிறாயே !!!!!!

அன்பை வேண்டி அனுதினமும் 
ஆவலாய் ஓடோடி வந்தேன் 
அருகில் வந்தபோது அன்பை 
ஊட்டினாய் அதையே வேண்டினாய்  !!

விலகி சென்ற நேரம் பார்த்து 
விருப்பம் இல்லாததை விரும்பி 
செய்து விலகி விலகி சென்றாயே !!

கொடுத்த அன்பையும் குற்றம் 
காணும் அளவுக்கு நான் 
குனிந்து நின்றேனே !!

தெரிந்தும் தெரியாமல் நாடகமாடி 
நீ ஏமாற்றுவது என்னை 
அல்ல உன் உயிரை 
என்பதை மறந்துவிடாதே !!

நெஞ்சம் வாடும் போதெல்லாம் 
தஞ்சம் நீயே என்று அங்கே 
உன்னிடம் கொஞ்சி 
விளையாடியதும் நான் தானே !!

புரிந்து கொள் ...புரிந்து கொள் ...!!!!!

அமைதியாக ஊர்ந்து 
செல்லும் ரயிலின் 
இருக்கையில் அன்னையாய்
நீயும் உன் மடியில் 
அன்பு குழந்தையாய் நானும் 

இரக்கமே இல்லாமல் நான் உறங்க
அன்பும் பாசமும் உன் கண்ணில் 
ஏக்கமும் தவிப்பும்என் நெஞ்சில்
கனிவுடன் என்னை கவனிக்க நீயும்
கண்ணீரை அடக்க மாட்டாமல் நானும் 

உண்மை அன்பை 
மட்டுமே கேட்ட நான் 
இன்று வாய் பேச 
மாட்டாமல் ஊமையாய் 
உன் முன்னே ....

உள்ளம் என்று ஒன்று 
உனக்கிருந்தால் என்
உண்மை அன்பை
புரிந்து கொள் ...