Total Pageviews

Tuesday, May 10, 2011

நீ விளையாட ........!!!!

தூரத்தில் இருந்த வரை 
என்னை நிலவை போல ரசித்தாய் 
அருகில் வந்ததும் என்னில் 
களங்கம் காண்கிறாய் 

விலகி செல்லவும் விடாமல்
வழி மறித்து நிற்கிறாய் 
விருப்பமே இல்லாமல் 
விரும்பி வருகிறாய் 

குழந்தையாய் இருந்தவளை 
குரங்காய் மாற்றினாய்
குதிக்க விடாமல் 
கட்டி போட்டாய் 

இன்னும் என்னென்ன 
செய்ய போகிறாய் 
என்று என்னிடம் கூறு 

உயிருள்ள என்னை 
உயிரற்றவளாக்கி 
தருகிறேன் நீ விளையாட ........

1 comment:

  1. திருத்த முடியாது.....ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்.....

    ReplyDelete