Total Pageviews

Thursday, March 29, 2012

அணைத்துக்கொள் அன்பே !! !!

கண்ணே உன்
கண்ணோடுகண்ணாய்
உயிரோடு உயிராய்

உடலோடு உடலாய்
வாழ்ந்த காலம் எல்லாம்
கனவாகிப்போனது இங்கே ...

உன்னுடன் நானும்
என்னுடன் நீயும்
இல்லை இன்று ....

ஒரு நாள் என்னைக்
காணும் ஆவலுடன் நீ
ஆனந்தமாய் ஓடி வருவாய் ...

அன்று என்
 உயிர் பிரிந்து
இமைகள் மூடி ...

வெற்றுடலாய் கட்டிலில்
காத்திருப்பேன்
உன்னைக் காண

அணைத்துக்கொள் அன்பே !! 

No comments:

Post a Comment