Total Pageviews

Thursday, March 29, 2012

இரவே முடிந்து போனது......!!!!

தனிமையாக இருக்க
எண்ணி ஓடினேன்
பல மைல் தூரம்.....

துரத்தினாய் உன் காதலால்
இரவுகள் எல்லாம் 
நீண்டு போனது .... 


உறக்கமே மறந்து 
போனது உன் முத்தத்தின்
சத்தம் மட்டும் காற்றின் ஒலியில்

இங்கே மவுனமாய் கேட்கும்
போது காதலே இல்லா
காவியமாய் நான் இங்கே


இந்த இரவின் நீளத்தைவிட 
உன் நினைவின்
நீளம் கொடுமையானது 


என் உறக்கத்துடன் 
உன் உறவின் நினைவு 
போட்டியிட இங்கே 
இரவே முடிந்து போனது......!!!!

No comments:

Post a Comment