Total Pageviews

Thursday, March 29, 2012

சந்தோஷ நிமிடங்கள் !!!!!!!!!

ஒரு துளி கண்ணீரை பார்த்து
உயிர் துடிக்கும் நீ
இன்று உருண்டோடும்
கண்ணீரைக் கண்ண்டும்
உறுதியாய் நிற்பது ஏன் ??

என் கண்ணீரில்
உப்பில்லையா
அல்ல உன் கண்களில்
தெளிவில்லையா ??

என் புன்னகையின்
பின்னே ஒளிந்துள்ள
சோகம் நீ உணரும்
காலம் வருமா ??

கல்லில் பதித்த
தடமாய்இருந்த நம் காதல்
இன்று கடல் அலையில்
பதித்த கால் தடமாய் போனதோ ??

உன்னுடன் கழித்த
சந்தோஷ நிமிடங்கள்
அனைத்தும்இன்று
நிரந்தரமில்லாமல் போனதே ....!!

ஆனந்தமாய் வந்து
கால் தடத்தை அழித்து விட்டு போகும்
அலையே அதில் என் கண்ணீரும்
கலந்துள்ளது என்பதை மறவாதே !!!!

No comments:

Post a Comment