அன்பே தெய்வமாய்
அமைதியே வாழ்க்கையாய்
தூரத்தில் தோன்றிய நதி
போல் செல்லும் தடமும்
சேரும் இடமும் அறியாமல்
பயணித்து கொண்டு இருந்த
என்னுள் இடையில் இணைந்த
ஓடையாய் நீ வந்து கலந்தாய்
திசையே தெரியாமல் நான்
பயணிக்க எந்த நம்பிக்கையில்
நீ வந்து என்னுடன் சேர்ந்தாய்
எனது இந்த பயணத்தில்
இடையூறு இல்லாமல்
பயணிக்கும் துணிவு
உனக்கிருந்தால் என்னுடன் வா
இல்லையேல் தடம் மாறி
ஓடையாகவே பிரிந்து சென்று விடு .....
No comments:
Post a Comment