உன் வார்த்தைகளுக்கு
முக்கியத்துவம் தந்த நீ
ஏன் உன் வாழ்க்கைக்கு
முக்கியத்துவம் தரவில்லை ?
வாழ்க்கைக்கும் வார்த்தைக்கும்
அர்த்தம் விளங்கவில்லையா
இல்லை வாய் பேச்சில் மட்டுமே
வாழ்ந்துவிடலாம் என்று எண்ணி விட்டாயா ?
மற்றவர் கூறும் வார்த்தைகள்
என்றுமே பொய்யானவை அல்ல
என்பதை உணர்ந்துகொள்
நீ கூறும் வார்த்தைகளையும்
பொய்யாக்கிவிடாதே
உண்மையோ பொய்யோ
வார்த்தைகளுக்கு வலிமை உண்டு
அதிர்வுகள் உண்டு சக்தி உண்டு
உனது வார்த்தைகளே உனது வாழ்க்கை !!
No comments:
Post a Comment