நீ கோப படும்போதெல்லாம்
தூர நின்று வேடிக்கை பார்த்தேன்
நீ அன்பை பொழியும் போதெல்லாம்
அத்தனை வருத்தங்களையும்
தூர தூக்கி எறிந்தேன்
உலகமே எட்டி உதைத்தாலும்
உன் அன்பு என்னை கையில்
ஏந்தி கொண்டபோது மருத்துபோன
அனைத்தும் மறந்து போனதே
காற்றில் மழையில் புயலில்
சிக்கியபோதும் கலங்காத என் உள்ளம்
உன் அன்பு பிடியில் சிக்கி
தவித்தபோது அதை தாங்கும்
சக்தி இல்லாமல் போனதே
அன்னையின் மடியில் சாய
தோன்றும்போதெல்லாம்
என் அன்னையாய்
அருகினில் இருந்தாயே
கண்ணீரையும் கொடுத்து
துடைத்தும் விட்டாயே
காயமும் தந்து மருந்தும் இட்டாயே
இதயத்தில் புகுந்து ஓட்டையிட்டு ஒளிந்துகொண்டாயே
இதய துடிப்பை நிறுத்திவிடு
இல்லை உள்ளிருந்து ஓடிவிடு
ஒளிந்திருக்கும் நீயும் பாவம்
ஓட்டையான இதயமும் பாவம் .....
No comments:
Post a Comment