உனக்காக எல்லாமே உனக்காக
என்று கூற நினைக்கும்போதெல்லாம்
எனக்காக எல்லாமே எனக்காக
என்று வார்த்தைகள் வந்தது ஏன் ?
இங்கு நீ வேறு நான் வேறு இல்லை
என்பதால் சிலுவையை
தூக்கி சார்த்திவிட்டாயே பாரம்
சுமப்பது நீயும்தானே .....
இன்று பழியையும்
பாவங்களையும் மட்டும் என்னை
சுமக்க விட்டு பார்த்து நிற்கிறாயே ஏன் ?
பாசம் மறைத்து விலக்கியது
உன் உடலை அல்ல உன் உயிரை ....
No comments:
Post a Comment