எதற்க்காக நீ வேண்டும் இன்று ?
என்னை தாக்கியது எது
உனது அன்பா
அரவணைப்பா
ஆறுதல் வார்த்தைகளா
நீ தந்த அந்த
இனிமையான முத்தங்களா
உன் கொஞ்சும் மொழிகளா
எட்டி இருந்தபோதெல்லாம்
கட்டி அணைத்த நீ
அருகில் வந்த போது
ஏன் கண்களை மூடிகொண்டாய்
கானல் நீரை கடலாய் கண்ட
உன் கண்களுக்கு உண்மை
கடல் கானல் நீராகி போனதோ ?
இமை பொழுதும் கண்களை
இமைக்காமல் உன்னை
ரசிக்க செய்தது எது ?
No comments:
Post a Comment