ஒவ்வொரு நாளும் உன்னோடு
சேர்ந்து பார்த்து ரசித்த
அதே நிலவு இன்று என்
கண்களுக்கு தணலாய் தகிக்கிறதே
உன் அருகில் இருக்கையில்
நீரும் நெருப்பும் ஒன்றுதானே
வீசி எறிந்தாலும் வாசத்தை
விட்டு சென்ற மல்லிகையாய் நீ
மடியிலிட்டு தாலாட்டிய குழந்தையை
இன்று மண்ணில் தூக்கி
எரிந்து விட்டாயே
பாரம் குறையும் என்றா
பாவம் தீரும் என்றா ?
No comments:
Post a Comment