Total Pageviews

Wednesday, March 28, 2012

நினைவுகள் குளிர்ச்சியாய்..!!!!

மழை பெய்யும்போதெல்லாம்
உன் நினைவுகள் குளிர்ச்சியாய்
ஓடும் மேகங்களிலும்
உன் நிழல் தேடினேன்

வருடி செல்லும்  காற்றில்
உன் வாசம் தேடினேன்
ஆடையின் வருடலில்
உன் ஸ்பரிசத்தை தேடினேன்

எதையும் காணாமல்
உன் குரல் மட்டும் இங்கே
என் காதுகளில்
ஒலித்துகொண்டிருக்க

உன் வார்த்தைகளை மட்டுமே
சுவாசித்துக்கொண்டிருக்கிறேன்
உயிருடன் ஒருநாள் உன்னை
அணைப்பேன் என் நம்பிக்கையில் ..!!

No comments:

Post a Comment