Total Pageviews

Wednesday, March 28, 2012

வந்துவிடு !!!!

உன்னை நினைத்தேன் 
கவிதை பாட ...
வார்த்தைகள் வராததால் 
நிலவை அழைத்தேன் துணைக்கு

அது என் நிழலை காட்டி மறுத்தது 
எனது மவுனத்தையே 
கவிதையாய் வடித்தேன்

உன் நினைவுகள் 
நெஞ்சில் அலைமோத 
என் கண்ணீரும்
இங்கே கவிதையாகிபோனது 

கண்ணீரை துடைக்க
உன் கைகள் இங்கே இல்லை 
என்றாலும் உன் வார்த்தைகள் 
சில துளிகளை தடுத்து விட்டதால்

அந்த துளிகளை இமைகள் தாங்கி 
நிற்கின்றன உன் வருகைக்காக 
வந்துவிடு இந்த 
கண்ணீரை தாங்குவதற்கு ....

No comments:

Post a Comment