Total Pageviews

Wednesday, March 28, 2012

இதயம் கல்லாகி போனதோ ???

கனவுகளுடனும் 
உன் நினைவுகளுடனும் 
வாழ்ந்த காலம் போதும்

உன் மேல் நான் கொண்ட 
அன்பிற்காக நீ கொடுத்த
பரிசு கண்ணீர் மட்டும்தானா 

நம் பிரிவு வாட்டுவது 
உன்னை அல்ல 
என்னை மட்டுமே  

பிரிவை உணரும் 
காலம் வருமா இங்கே 
யார் செய்த சதி இது 

கருணையும் காதலும் 
கொண்ட உன் இதயம் 
கல்லாகி போனதோ 

பாறையிலும் நீர்
சுரக்கும் என்பதை 
நினைவில் கொள் ..!!

No comments:

Post a Comment