Total Pageviews

Saturday, September 17, 2011

என் மனதில் நீ !!!!

கல்லில் வடிக்கப்பட்ட 
சிலையில்லை நீ 
என் கைகளால் 
வரையப்பட்ட ஓவியம் ...... 

சூரியனை காண 
ஓடியதில்லை நான் 
எட்டு திக்கும்  நீயானதால் ..... 

நிழலுக்காக மரங்களை
தேடி ஓடியதில்லை நான் 
உன் அன்பு நிழலில் 
எப்போதும் வாழ்ந்ததால் .... 

பூக்களின் வாசம் 
முகர்ந்ததில்லை நான் 
என் சுவாசத்தில் நீ இருந்ததால் ..... 

உறங்க நினைத்ததில்லை
என் இமைகளில் 
நீ வாசம் செய்வதால் ....... 

பச்சை பாதையில்
பதிந்துவிட்ட பாதங்களை 
போல என் மனதில் நீ !!!!

1 comment:

  1. மெல்லியலாள் சாய்ந்தால் தாங்கிகொள்; மீறி நெஞ்சில் அடி விழுந்தால் வாங்கிகொள் !

    ReplyDelete