பிஞ்சு விரல்கள் கொஞ்சும் குரல்
வந்த திசையை நோக்கினால்
பிச்சை எடுக்கும் பச்சை மண் !
கண்ணில் ஏக்கம் கையிலே
தட்டுடன் அம்மா என்றான்
அமைதியாய் நின்றான் !
ஒரு வேளை உணவிற்கு
வெய்யிலில் திரியும்
இவனுக்குள் வெள்ளை மனது !
வீட்டுகொரு மரம் வளர்
என்று வீண் விவாதம் செய்யும்
வீணர்களே இங்கே !
பசிக்கு உணவு இல்லையே
பார்க்கவில்லையா உங்கள்
கண்கள் இந்த பாவங்களை !
என்று தீரும் இந்த பசி
பட்டினி பிச்சை என்ற
அவல நிலை இங்கே !
வந்த திசையை நோக்கினால்
பிச்சை எடுக்கும் பச்சை மண் !
கண்ணில் ஏக்கம் கையிலே
தட்டுடன் அம்மா என்றான்
அமைதியாய் நின்றான் !
ஒரு வேளை உணவிற்கு
வெய்யிலில் திரியும்
இவனுக்குள் வெள்ளை மனது !
வீட்டுகொரு மரம் வளர்
என்று வீண் விவாதம் செய்யும்
வீணர்களே இங்கே !
பசிக்கு உணவு இல்லையே
பார்க்கவில்லையா உங்கள்
கண்கள் இந்த பாவங்களை !
என்று தீரும் இந்த பசி
பட்டினி பிச்சை என்ற
அவல நிலை இங்கே !
No comments:
Post a Comment