Total Pageviews

Tuesday, March 1, 2011

தவிக்கும் காதல் !

குழந்தையாய் இருந்தபோது நான்
விட்ட காகித படகு தடுமாறி
கரை ஒதுங்கியது போல
ஒதுக்கி வைக்கப்பட்ட  என் காதல் !
அனைவரும் உறங்கும் அந்த
வேளையிலும் அமைதியாய்
உன் இதயத்தோடு 
 உறவாடும் என் இதயம் !
உன் பெயர் மட்டுமே மந்திரமாய்
எந்நேரமும் என் மனதில்
கவிதை எழுத கூட இங்கே
வார்த்தைகள் இல்லை !
தண்ணீரில் கலந்துவிட்ட
எண்ணையாய் நீயும் இங்கே
தத்தளிக்கும் இதயத்துடன்
தவிக்கும் நானும் !
மண்ணில் கலந்த நீராய்
என்னுள் கலந்த உன்
நினைவுகளை  நம்பிக்கையுடன்
சுமந்திருக்கிறேன் இங்கே !
என்றாவது ஒரு நாள் உன்
இதயத்தின் ஓரம் இளைப்பாற
ஒரு இடம் தருவாய் என்று
தவிக்கிறேன் இங்கே !

No comments:

Post a Comment