Total Pageviews

Monday, March 21, 2011

மீண்டும் வேண்டும் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!


உன்னை நினைத்தேன் முதல் முதல்
 நாம் சந்தித்த அன்றிலிருந்து இன்றுவரை
 ஏதும் புரியாத ஒரு நிலை என்னிடம்
 நீ காட்டிய அதே அன்பு இன்றுவரை
 ஏனோ தெரியவில்லை பல 
நேரங்களில் உன் மீது எனக்கு
 கோபம் தான் வந்தது காரணம் 
எனக்கே தெரியவில்லை 
ஆனாலும் உன்னை மீண்டும் 
சந்திக்கையில் அந்த 
கோபம் ஆதவனை கண்ட 
பனித்துளியாய் மறைந்து 
போகும் ஆனால் இன்று நீ எங்கு
 எப்படி இருக்கிறாய் என்ற 
நிலை கூட தெரியாமல் 
உன் நினைவுகளை மட்டும் மனதில் 
சுமந்தபடி நான் .மீண்டும் வேண்டும் 
அதே அன்பு தருவாயா வருவாயா ?

No comments:

Post a Comment