Total Pageviews

Monday, March 14, 2011

நீ ஒரு காவியம் !!!!!!!!!

ஊர் உறங்கிய பின்னும்
விழித்திருந்தேன் உன்
 நினைவுகளில் என்னை
விரட்டிகொண்டிருந்தாய் நீ ,
பல பாடம் படித்த நான்
உன்னை எழுத்தில் வடிக்க
எண்ணினேன் , நீ கதையாய்
வருவாயா இல்லை
கவிதையாய் வருவாயா ?
விடை கிடைக்காமலே
விடிந்தது காலை , நினைத்தேன்
 மீண்டும் நினைவில்
நீ கதையாய் எழுத்தில்
நீ கவிதையாய் உன்னை
படிக்க இங்கே பலருண்டு
புரிந்துகொண்ட எவரிங்கே ?
 நீ ஒரு காவியம் உன்னை
படைக்க யார் இங்கே வருவார் ?

No comments:

Post a Comment