Total Pageviews

Monday, March 14, 2011

வாசித்து பார் வாசித்து பார்

பலர் என் எழுத்தை
பாராட்டினார்கள் ஆனால்
என் எழுத்துக்கு காரணமான
 நீ ஏன் எங்கோ அமைதியாய் ?
கேள்விகளை கணையாய்
தொடுக்கிறேன் கண்
முன்னே நீ இல்லையே
பாராட்ட மனமில்லையா
இல்லை பார்த்துவிட்டு
அமைதியா ? எங்கே என்
 கவிதைகளை நீ
வாசிக்காமல் போய்
விடுவாயோ என்று
சில நேரங்களில் அச்சம்
காரணம் சோகமாய் ஒன்றும்
ஆசையாய் ஒன்றும்
கை கொட்டி சிரிக்க ஒன்றும்
கண்ணீர் விட ஒன்றும்
என்று அன்று தனிமையில்
எழுதியதெல்லாம் இன்று
தகவலாய் உன் முன்னே
வாசித்து பார் வாசித்து பார் 

No comments:

Post a Comment