Total Pageviews

Monday, March 14, 2011

பூந்தோட்டம்

அந்த பூந்தோட்டத்தில் பூ
பறிக்க சென்றேனா இல்லை பூ
 பார்க்க சென்றேனா எனக்கே
தெரிய வில்லை சர சர  என்ற
 ஒலி அருகினில் அவன்
அமைதியாய் முதல் நாள்
அவனை பாக்கிறேன் ,
ஆனாலும் என்றோ பார்த்தது
போல் உணர்கிறேன் , என்னை
 பார்த்த அவன் தன்னை
 தந்து சென்றான் என்னை
தவிக்க விட்டான் அவன்
நினைவுகளில் . மறுநாளும்
பார்த்தேன் ஆளில்லா இடமும்
அசையாமல் நானும்.
வாய் பேச வார்த்தை இல்லாமல்
மொழியே மறந்ததுபோல்
என்னையே மறந்தேன் .
கண்விழித்து பார்த்தேன்
கண்டது கனவு பூவும் இல்லை
தோட்டமும் இல்லை..........

No comments:

Post a Comment