Total Pageviews

Thursday, February 24, 2011

என்ன நிலை ?

அன்பே ஆருயிரே என்று
அழைத்ததில்லை !

ஆனந்தமாய்  கட்டி
அணைத்ததில்லை !

ஆனாலும் இது காதல்
இருந்தும்  இங்கே மோதல் !

அருகருகே இருந்தும் 
அரவமில்லை அங்கே !

முத்தம் கொடுத்தாய்
உச்சி முகர்ந்தாய் !

அன்பை   கொடுத்தாய்
அதையே வேண்டினாய் !

சொந்தமும் இல்லை
சுற்றமும் இல்லை !

தேடி வந்தாய் நீ
ஓடி வந்தேன் நான் ! 

 வெப்பமும் இல்லை
வெயிலும் இல்லை !

குளிரும் இல்லை
மழையும் இல்லை !

 உருக்கினாய் என்னை 
உறைந்துபோனேன் நான்  !





No comments:

Post a Comment