Total Pageviews

Wednesday, February 23, 2011

கோபம் !

வானுக்கு கோபம் வந்தால்
மழையாய் கொட்டுகிறது !
மேகத்துக்கு  கோபம் வந்தால்
இடியாய் முழங்குகிறது !
கடலுக்கு கோபம் வந்தால்
பேரலையாய் எழுகிறது !
காற்றுக்கு கோபம் வந்தால்
புயலாய் வீசுகிறது !
வெயிலுக்கு கோபம் வந்தால்
தணலாய் தகிக்கிறது !
நிலவுக்கு கோபம் வந்தால்
ஒரு நாள் ஒளிந்துகொள்கிறது !
உனக்கு கோபம் வந்தால்
உன் மௌனம் கொல்கிறது !
என்னை கொல் இல்லையேல்
உன் மௌனத்தை கொல் !

No comments:

Post a Comment