Total Pageviews

Monday, February 21, 2011

ஒற்றை வார்த்தை !

ஊரெல்லாம் உறங்க
விழித்திருந்தேன் வீணிலே !
வேலையும் இல்லை
வேண்டுதலும் இல்லை !
உறங்கு என்ற உன்
ஒற்றை வார்த்தைக்காக
விழித்திருந்தேன் விடியும் வரை !
விடிந்ததும் வினவினாயா?
இல்லை விளக்கம் தான் தந்தாய்!
உன் பார்வைக்கு எட்டும்
தூரத்தில் நான் இல்லை
உன் மனதிற்குமா இது தூரம் ?
நேரில் பார்க்கையில் என்
பார்வையை உன் பார்வையால்
தடை செய்கிறாய்  !
நீ திரும்பி நடக்கையில்
என் பார்வை உன்னை
பின் தொடர்வதை
எப்படி தடுப்பாய் ?
உன் நிழலிலும் என் நிழல்
ஒளிந்திருக்கும்
விரட்ட நினைக்காதே வீணே !
காலம் ஒரு நாள் கேள்வி கேட்கும்
அது வரை காத்திரு !
கனவில் மட்டும் என்னுடன்
கை கோர்த்திரு !

No comments:

Post a Comment