Total Pageviews

Friday, February 18, 2011

நீயும் நானும்......

 உன்னை நினைத்து நான்
வாழும் தருணங்கள்
உன் நினைவில் கரையும்
ஒவ்வொரு பொழுதுகள்
உன்னிடம் நேரில் பேசியதை
விட தனிமையில் உன்னுடன்
நான் பேசியதே அதிகம்
நீ என்னிடம் விட்டு சென்றது
உன் நினைவுகளை
மட்டுமல்ல , உன் அன்பு வேண்டி
இந்த உலகில் பல பேர் இருக்கலாம்
சிலருக்கு கிடைக்கலாம்
ஆனால் அதை முழுதும்
அனுபவிக்க வேண்டும் என்று
தன்னலம் கொண்டவள் நானாக
மட்டுமே இருக்க முடியும்
உன் பாசத்தில் கரைந்து
உன் பரிவில் உருகி இன்று
நான் நானாக இல்லை
உன்னுடம் அமர்ந்திருந்த அந்த
ஆனந்த தருணங்களை
ஒவ்வொரு முறையும்
எண்ணி பார்க்கிறேன்
என்றாவது ஒரு நாள் நீயும்
நானும் அங்கே அதே
சந்தோஷ நிமிடங்களை மீண்டும்
பெறுவோம் என்று நம்பிக்கையுடன்
காத்திருக்கிறேன் தனிமையில் .................

No comments:

Post a Comment