Total Pageviews

Saturday, February 5, 2011

நனைத்துவிட வா

உனக்காக காத்திருந்த நாட்களைவிட
உன்னை எண்ணி ஏங்கிய
நாட்களே அதிகம் ...........
ஏக்கத்தில் நான் எங்கோ நீ
கண்ணில் கனவுடன்
காணும் பொருளெல்லாம்
கருமையாய் கூடும்
மழை மேகத்தில் உன் உருவம்
காற்றில் கரைந்துவிட 
கண்ணீரில் என் உள்ளம்
மழை வந்தால் மயிலாய் ஓடுவேன்
விரித்தாட தோகை இல்லையே
கண்ணீரை மறைக்கும் மழையும்
கட்டியணைத்தால் காணாமல் போகும்
மழையோடு வா மறைந்து போக
அல்ல நனைத்துவிட
காத்திருப்பேன் கண்ணீரோடு
கலந்து வா மேகத்தோடு
உருவமாய் இல்லையேனும்
உன்னை அறிவேன் நான் ...

No comments:

Post a Comment