Total Pageviews

Saturday, February 5, 2011

குற்றவாளி யார் ?

அமைதியாய் அமர்ந்திருந்தான் கண்ணன் காவல் நிலையத்தில் , அவன் கண்கள் எதையோ தேடுவது போல் இருந்தது , ஆனால் சிந்தனையோடு இருந்தான் , காவல் காரர் பேசுவதை காதில் வாங்கியவனாய் தோன்றவில்லை.

 அருகில் இருந்தவரிடம் கேட்டேன் மெல்ல இவனை தெரியுமா என்று தெரியாதுங்க ஆனா அவன் மதுபானத்தில்  விஷத்தை கலந்து நண்பனுக்கு கொடுத்து விட்டானாம் என்றார் , என்ன .....? கண்ணனா இப்படி? நண்பனுக்கா ? எந்த நண்பன் ? இது எதுவும் தெரியாமல் விழித்துகொண்டிருந்தேன் காவல் நிலைய வாசலில்.

சிறிது நேரத்தில் ஒரு நண்பன் வந்தான்  அப்பாடா இப்போது  புரிந்து விடும் என்று நிம்மதியுடன் நின்றிருந்தேன் , அருகில் வந்தவனிடம் என்னடா கண்ணன் என்ன செய்தான்?  ஏன் அவன் இங்கே ? எப்படி?  எங்கேனும் தவறு நடந்து விட்டதா?  என்று கேள்வி மேல் கேள்வி கேட்டேன் காரணம் இருக்கிறது .

கண்ணன் மிகவும் சாதுவானவன் ,மிக நெருங்கிய நண்பர்களிடம்  மட்டுமே பேசுவான் யாரிடமும் அதிர்ந்து கூட பேச தெரியாதவன்  அவனா இன்று காவல் நிலையத்தில்? அதுவும்  கொலையாளியாய் ... இல்லை இருக்காது இதில் எதோ தவறு நடந்திருக்கிறது , இதை எப்படி தெரிந்துகொள்வது . இவனுக்கு மது அருந்தும் பழக்கம் இருக்கிறது ஆனால் பகையாளி  என்று யாருமே  இல்லை , அப்படியே  விரோதம்  இருந்தாலும் கொலை செய்யும் அளவுக்கு போக மாட்டானே.

 இது எப்படி நடந்திருக்கும் , சரி பொறுத்திருப்போம் , சிறிது நேரத்தில் அங்கே  கொலையான  நண்பனின்  உறவினர்கள்  வந்து சேர்ந்தார்கள் கண்ணனை தங்களிடம் ஒப்படைக்கும்படியும்  அவனை அவர்களே கொல்ல போவதாகவும் பேசிக்கொண்டார்கள் .



அட  இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா என்று நினைக்க தோன்றியது என்ன நடந்தது என்று தெரியாமலே இப்படி பழிக்கு பழி கொலைக்கு கொலை என்று இருந்தால் என்ன ஆவது ? இப்படி குற்றவாளிகளை நாமே தண்டித்ததால் பிறகு காவல் நிலையம் எதற்கு ? நீதி எதற்கு ?

அருகில் இருந்த என் நண்பனிடம் கேட்டேன், என்னுடன் வா என்று அங்கே இருந்த ஒரு மரத்தடிக்கு என்னை அழைத்து சென்றான் . அவன் சொன்ன வார்த்தைகள் எனக்கு மிகவும் அதிர்ச்சியாய் இருந்தது , இப்படியும் நடக்குமா ? எனக்கு மயக்கமே வந்து விட்டது அந்த மரத்தடியிலேயே சிறிது நேரம் அமர்ந்து விட்டேன் , நேரம் போனதே தெரிய வில்லை , பாவம் கண்ணன் அவன் என்ன  செய்வான் எய்தவன் யாரோ இங்கே குற்றவாளியாய் இவன் , இதுதான் உலகம் என்று நொந்துகொண்டேன்.

 ஆனாலும் அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை , எப்படி முடியும் இது என்ன சாதாரண விஷயமா ? இப்படி எல்லாம் கூட யோசிப்பார்களா ? அதுவும் மனதில் விரோதம் வைத்து கொண்டு உறவாடி கொல்ல இவர்களுக்கு எப்படித்தான் மனசு வருதோ .... நண்பன் மதி என்னிடம் சொன்னது இன்னும் என் காதுகளில் ஒலிக்கிறது , இங்க பாருடா இத யார் கிட்டயும் சொல்லாத உன்னை நம்பித்தான் சொல்றேன் , மூச்சி விட்டேனா உன்னையும் கொன்னுடுவோம் என்று அவன் அமைதியாய் எச்சரித்தது .....

ஐயோ எனக்கேன் வம்பு சொல்லுடா நான் யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்தேன்.
பிறகு மதி சொல்ல ஆரம்பித்தான் நான் , கண்ணன் , அறிவு என்று இன்னும் நான்கு ஐந்து நண்பர்களின் பெயர்களையும் அடுக்கிகொண்டே சென்றான் அடுத்து அவன் சொன்னது ..... முதலில் எப்போது சந்திக்கும் இடத்துக்கு கண்ணனையும் வேறு இரு நண்பர்களையும் அனுப்பி விட்டார்களாம் , பிறகு அருகில் இருந்த மதுபான கடையில் மது பாட்டில் வாங்கிகொண்டு மதியும் மற்றுமொரு நண்பனும் அருகில் இருந்த ஒதுக்கு புறமான ஒரு இடத்திற்கு வந்தார்களாம் பிறகு மருத்துவர் பயன்படுத்தும் ஒரு ஊசியில் அவர்கள் வைத்திருந்த விஷத்தை ஏற்றி பின் அதனை அந்த மது பாட்டிலின் மூடியின் வழியே உள்ளே செலுத்தினார்கலாம்.

 பின்பு அங்கிருந்து நண்பர்கள் இருந்த இடத்திற்கு சென்று கண்ணா இந்த இந்த மதுவை திற என்று அவனிடம் கொடுக்க அவன் அதை வாங்கி எப்போதும் திறப்பது போலவே திறந்தான் , கொலை செய்ய தயாராக அழைத்து வந்த அந்த நண்பனுக்கு முதலில் அந்த மதுவை ஊற்றி கொடுத்து விட்டார்கள் பின்பு மற்றுமொரு பாட்டில் திறந்து அதில் இருந்த மதுவை மற்ற நண்பர்கள் பகிர்ந்து கொண்டார்களாம் , இதில் சந்தேக படும்படி எந்த நிகழ்வும் இல்லை , ஆனாலும் கண்ணன் கொலையாளி ,

அட கடவுளே இது என்ன நியாயம் ? இதுதான் உலகமா? உடன் இருக்கும் நண்பனுக்கு தீங்கு நினைக்கும் இவர்கள் எல்லாம் நண்பர்களா, இல்லை மனிதர்களே இல்லை , இவர்களுடனான உறவை இன்றோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டேன். அங்கிருந்து எழுந்து கனத்த மனதுடன் மெதுவாக அந்த இடத்தை விட்டு அகன்றேன் . கண்ணனை எப்படியும் காப்பாற்ற வேண்டும் . கடவுளே எனக்கு ஒரு வழி காட்டு  



No comments:

Post a Comment