ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு
மீண்டும் மீண்டும் அதே ஏமாற்றம் !
ஆசைகள் பல அறிவுரைகள் பல
ஆனாலும் குறையவில்லை ஏக்கம் !
கடந்து வந்த தூரம் தெரியவில்லை
சென்று சேரும் நேரம் தெரியவில்லை !
சிரித்திருந்த காலங்கள் போயின
சிந்தனையில் காலங்கள் கழிந்தன !
பசியும் இல்லை தூக்கமும் இல்லை
கவலையும் கண்ணீரும் இங்கே !
கண்ணெதிரே யார் யாரோ
கனவினிலே யார் யாரோ !
ஊட்டி வளர்த்த தாய் எங்கே
தூக்கி வளர்த்த தந்தை எங்கே !
யாருக்காக வந்தேன் இங்கே
யாரை எண்ணி நின்றேன் இங்கே !
அண்ணன் தம்பி அருகில் இல்லை
ஆறுதல் கூறும் ஆளும் இல்லை !
அருள் தர இங்கு தெய்வமில்லை
அணைத்துக்கொள்ள அன்புமில்லை !
வாழ்த்த வந்தவர் தூற்றிபோக
வாழ வந்தவன் ஓடி போனான் !
தனிமையில் ஏங்கும் மனம்
தவிக்கிறது இங்கே தினம் !
No comments:
Post a Comment