என் வீட்டு நிலைக்கண்ணாடி கூட
உன் முகம் தான் காட்டுகிறது
லஞ்சம் கொடுத்துவிட்டாயோ
இல்லை அதிக அன்பு காட்டி
மயக்கிவிட்டாயோ !
பாவம் அது நொறுங்கி
போனால் சேராது !
அதற்கெப்படி தெரியும்
உன் கண்ணாமூச்சி
விளையாட்டெல்லாம் ?
முடிந்தால் மன்னிப்பு கேள்
இல்லையேல் மன்றாடு
என் முன் என்னை
மட்டுமே காட்ட சொல்............
No comments:
Post a Comment