உலகம் அழிய போகிறதாம் ,
அழுகிறார்கள் எல்லோரும்
எனக்கு மட்டும் சந்தோஷம்
நான் என் உயிரை கொடுத்து
உன்னை வாழ வைப்பேன்
என்றாவது ஒரு நாள்
என் நினைவு உனக்கு வரும்
என்னை இழந்து விட்டதாக
அன்று நீ வருத்தபடமாட்டாய்
உன்னோடு நான் உறவாக
அல்ல உயிராக என் உயிரை
உன்னோடு இணைக்க
எனக்கு வேறு வழி தெரியவில்லை
இப்போது புரிகிறதா
என் சந்தோஷத்தின் காரணம் ?
No comments:
Post a Comment